பாகம் 8

226 33 15
                                    

பாகம் 8

அன்றைய தினம் மாலை நேரம் அமரனுக்காக காத்து இருந்த சித்ரா ஏமாற்றதுடன் வீட்டிற்கு திரும்ப.. தூரத்தில் தன் காரில் அமர்ந்தப்படி இவளையே பார்த்து கொண்டு இருந்த அமரன் தன் கண்களை துடைத்து கொண்டு விமான நிலையத்தை நோக்கி அவன் காரை விரட்ட.... அவன் அருகில் அமர்ந்து இருந்த குரேஷி கோவமாக அமரனை பார்த்தவன்

குரேஷி - டேய் ஏன்டா இப்படி பண்ற பாவம் டா அந்த பொண்ணு...

அமரன் - இல்ல டா அவ என்னை கட்டிக்கிட்டா தான் இதை விட அதிகமா கஷ்ட்டத்தை அனுபவிப்பா..... அவ வாழ்க்கையில் நான் இல்லைனு ஒரு கட்டம் வந்தால் தான் அவள் life நல்லா இருக்கும்....அவ நல்லா இருக்கணும்....நல்லா இருப்பா...

என்று கண்கள் கலங்கியப்படி அமரன் சொன்னவன் சில மணி நேர பயணத்தின் முடிவில் ஏர்போர்ட் வாசலை சென்று அடைய.......

குரேஷி - டேய் கொஞ்சம் யோசி டா..

அமரன் - இல்ல டா என் முடிவு இது தான்....என்னைக்காவது நீ சித்ராவை பார்த்தா எல்லாத்துக்கும் சேர்த்து அவளுக்கு நான் நன்றி சொன்னேன்னு மட்டும் சொல்லிடு.....

குரேஷி - அமரா....

அமரன் - நான் போறேன் டா....

என்று சொன்னவன் விமான நிலையத்தில் இறங்கி தான் பயணிக்க இருந்த விமானத்தில் ஏறி அமர்ந்தவன் கண்களில் சித்ராவின் நினைப்பு மட்டுமே நிறைந்து இருந்த நேரத்தில்...ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வை இன்று இவன் நினைத்து பார்க்க.....

அமரன் - நான் உங்களை காதலிக்கிறேன்...

சித்ரா -  ஓ ...........
...
...
...

சித்ரா - என்ன சொன்னிங்க

அமரன்  - நா...ன் உங்..க..ளை காதலிக்கி...றேன்...னு சொன்னேன்

சித்ரா - எ ...ன்...ன......காதலா

அமரன் - ம்.... சரி நான் உங்களை இன்னைக்கு நைட் 9.00 மணிக்கு  இதே கடையில மீட் பண்றேன் bye சித்ரா

என்று அமரன் தன் காதலை அவளை பார்த்த முதல் நாளே அவளிடம் சொல்ல.....

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now