💛அமரனின் சித்ராம்பிக்கை💛
💛பாகம் 42
அமரன் அவள் சொல்லுக்கு கட்டுப்படாதவன் மீண்டும் அவளை வெறித்தனமாக நெருங்க முயல.......கடும் கோபத்தின் உச்சியில் சித்ரா மீண்டும் அவனை வேகமாக தள்ளி விட ....அமரன் இரண்டடி தள்ளி சென்று கீழே விழுந்த சமயம் அறையில் உள்ள சுவற்றின் கூர்மையான விளிம்பில் அவன் பின் தலை மோதி..
அமரன் - அம்மா....
என்று அவன் தலையை பிடித்து கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே விழ......
அழகி பாப்பாவின் அருகில் படுத்திருந்தவள் சொப்பனத்தில் இந்த காட்சி நடைபெற்றதும் பயந்து போய் அந்த அறையில் இருந்து வெளியே வந்தவள் பதறி அடித்து மாடிக்கு ஓடியவளை பார்த்து குரேஷியும் அமராவதியும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளை பின் தொடர...
மொட்டை மாடியில் அதே இடி சத்தத்துடன் பொழிந்த மழை நீரை தன் தேகத்தில் வாங்கிக் கொண்டு இருந்த அமரனை நோக்கி ஓடி வந்த சித்ரா, அவனைக் கட்டி அணைத்து அவன் முகம் முழுவதையும் தன் கரங்களால் தழுவியவள்..சித்ரா - உனக்கு ஒன்னும் இல்லையே.. அய்யோ தலையில ரத்தம்... என்ன ஆச்சு அமரா... என்ன அமரா
என்று தன்னை மீறி தன் காதலையும் ஆதங்கத்தையும் தன் பாசத்தையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தியவளை பார்த்து இவர்கள் அனைவரும் சொற்கள் தடைபற்ற நிலையில் நின்று இருக்க..
அமரன் - என்ன சித்ரா என்ன ஆச்சு..ஏன் இப்படி பதறுற.. என்ன ஆச்சு.. குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா
சித்ரா - இல்ல குழந்தைக்கு இல்ல.. உனக்கு....உனக்கு தலையில அடிபட்டு நான் உன்னை கீழே தள்ளி..என்னை மன்னிச்சிடு அமரா...உனக்கு ரத்தம்
அமரன் - ஏய் என்ன உளறுற..என்ன ஏதாவது கனவு கண்டியா
சித்ரா - கனவா.....
அமராவதி - என்னம்மா கீழ இருந்து கனவு கண்டு மாடி வரைக்கும் ஓடி வந்திருக்க என்னமா என்ன ஆச்சு
குரேஷி - ஓ பாப்பா அமரன்ன கனவு கண்டுட்டியா....சொல்லவே இல்ல
அமரன் - என்னடா என்ன என்னமோ பேசுறீங்க..என்ன பிரச்சனை என்ன ஆச்சு..
ŞİMDİ OKUDUĞUN
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Hayran Kurguகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.