சித்ரா - கையை விடு அமரா...
அமரன் - என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ சித்து
சித்ரா - நீ யாரு என்னை கேள்வி கேட்க.... என்கிட்ட உனக்கு என்ன உரிமை இருக்கு...உன்னோட எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன் அமரா... போ அப்படி.. எனக்கு வேலைக்கு நேரம் ஆகுது
என்று சொன்ன சித்ரா... அமரனின் கைகளை உதறிவிட்டப்படி அந்த இடத்தில் இருந்து சென்ற அடுத்த நொடி குரேஷி செந்தாமரை மற்றும் சிறுமி அமராவதி ஆகிய மூவரும் அமரனை நோக்கி வர
குரேஷி - என்னடா பேய் அறைந்த மாதிரி நிக்குற
அமராவதி - அம்மா... அம்மா.... எங்க இருக்க நீ..... சார் எங்க அம்மா எங்க
அமரன் -
அமராவதி - கண்ணாடி போட்ட சார் உங்கள தான் கேக்குறேன் எங்க அம்மா எங்கே
அமரன் - உங்க அம்மா வேலைக்கு போய்ட்டாங்க
அமராவதி - ஏன் நீங்க அவுங்கள வெளிய அனுப்பினீங்க
அமரன் - நான் போகாதன்னு சொன்னேன்.. சித்ரா கேக்கல
அமராவதி - கேக்குற மாதிரி சொல்லணும்.... என்ன ஆளு நீங்க
செந்தாமரை - பாப்பா என்ன நீ ஏன் பெரியவுங்கள இப்படி எல்லாம் பேசுற
அமரன் - விடுங்க ஐயா... இந்த பாப்பா பேசுனா எனக்கு என் சித்ரா பேசுற மாதிரி அழகா தான் இருக்கு....
அமராவதி - என் சித்ரா..... எப்பா..... தாங்கல...
குரேஷி - அம்மாடி குட்டி பிசாசு கொஞ்சம் சும்மா இருக்கியா....டேய் நீ வாடா நம்ம போய் சாப்பாடுட்டு சைட்க்கு கிளம்பலாம்..
அமரன் - பாப்பா இந்தா மா உன் அம்மா மாத்திரை கொடுத்தா
அமராவதி - ம் தாங்க
செந்தாமரை - தம்பி
அமரன் - சொல்லுங்க ஐயா
செந்தாமரை - நீங்க வேலை ஆரம்பிக்க போற இடத்துல எனக்கும் எதாவது வேல இருந்தா சொல்லுங்களேன்
அமரன் - ஏன் ஐயா இங்க தர சம்பளம் பத்தலையா
செந்தாமரை - இல்ல பா என் மகளுக்கு தலை பிரேசவம் இல்லையா பாவம் அவ இந்த நிலைமையில் வேலைக்கு போயிட்டு வரா..... எனக்கு வேற வேலை கிடைத்தால் அவ வேலைக்கு போக வேணா இல்ல
BẠN ĐANG ĐỌC
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.