🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱காட்சி..2️⃣
பாவலன் தன் வீட்டிற்கு இன்னொரு அம்மாவாக... அதாவது அண்ணியாக வரப்போகும் பாவையின் முகத்தைக் காண நம் நாயகன் கண்களில் ஆர்வத்தை நிரப்பி அவளை காண....
வணக்கம்.... என் பெயர் தான் சித்ரப்பாவை.....
என்று நம் கதையின் கதாநாயகி வாய்மொழி சொற்களை கேட்ட.... நம் கதையின் நாயகன் பாவலனின் இதயம் சிதைந்து... இருள் சுழ்ந்து முகம் மாறுவதை பார்த்த SSR...
என்னடா ஏன் உன் முகம் வாடி போச்சு என்ன ஆச்சு..
என்று இவர் கேக்க... அதே சமயம்
அம்மாடி சித்திரப்பாவை.. எங்கம்மா உன் அக்காவை காணோம்...
என்று முத்து ராமன் நம் கதையின் நாயகியை பார்த்து கேட்டதும் அவள் அழகாக புன்னகைத்தவள்...
அப்பா....அக்கா இவ்வளவு நேரம் இவங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தா.....திடீர்னு அவளுடைய வேலையில் இருந்து போன் வந்துச்சு...அதனால தான் காப்பி ஆறிடப் போகுதுன்னு நான் எடுத்துட்டு வந்தேன்...ஏன் நான் கொடுத்தா உங்க நண்பனின் பிள்ளைகள் காப்பிய எடுத்துக்க மாட்டாங்களா
என்று சித்திரப்பாவை கேட்டதும்..இவர்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க..
ஏம்மா எடுத்துக்க மாட்டாங்க, என் பிள்ளைங்க நீ வெறும் பச்சை தண்ணியை கொடுத்தா கூட குடிப்பாங்க... டேய் காப்பி எடுத்துக்கோங்க..
என்று SSR சொன்னதும்.... சித்திரப்பாவை சோபாவில் அமர்ந்திருக்கும் இவர்களின் முன்பு காபிக் கோப்பையை நீட்ட....
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....