காட்சி 10

63 10 8
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 1️⃣0️⃣

ரவி - என்னம்மா சொல்ற நான் எப்படி உன் கூட உன் வீட்டுக்கு வரது

சித்ரா - நீங்க என் கூட என் வீட்டுக்கு வர வேண்டாம்...என்கூட நம்ம வீட்டுக்கு வாங்க

பூங்கொடி - என்னடி நீ....யார் ஏதுன்னு தெரியாம இவரை எப்படி நீ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போக முடியும்

சித்ரா - அக்கா... அன்னைக்கு அனாதையா நின்ன என்னை நீயும் அப்பாவும் உங்க கூட அழச்சிட்டு போகலையா...அப்படி தான் இவரையும் அழைச்சிட்டு வரேன்....

பூங்கொடி - ஏய் எந்த இடத்தில் எதை பேசுற

சித்ரா - நீ கேட்ட கேள்விக்கு தானே நான் பதில் கொடுக்கிறேன்...

பூங்கொடி - கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா..அங்க பாரு ஆறியும் இன்பாவும் வராங்க

சித்ரா - சரி சரி நான் எதுவும் சொல்லல இப்ப என்ன இவரு நம்ம கூட வரக்கூடாதுன்னு சொல்றியா

பூங்கொடி - நான் எங்கடி அப்படி சொன்னேன்..தாத்தா உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க

ரவி - அம்மாடி நீங்க எல்லாம் யாரு... எங்க இருந்து வரிங்க..திடீர்னு எனக்கு இவ்வளவு உதவி பண்றீங்க...இப்போ உங்க வீட்டுக்கு என்ன கூப்பிடுறீங்க..எனக்கு ஒன்னும் புரியல மா...

என்று ரவி சந்திரன் பூங்கொடியையும் பாவையையும் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த தருணம் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி ஆறிறைவனும் அவனின் தங்கை இன்பாவும் வர..

ஆறி - தாத்தா

ரவி சந்திரன் - தம்பி என்னால உனக்கு ஏதும் தர்ம சங்கடமான நிலைமை வந்துருச்சா... என்னை மன்னித்துடுப்பா

ஆறி - ஐயோ என்ன தாத்தா என்ன பேச்சி இதெல்லாம்.....இன்னும் கேட்டா இதோ சித்ரா செய்த காரியத்தை நானே பண்ணி இருக்கணும்...ஆனா என்னுடைய மேல் அதிகாரிய பகச்சிக்க என்னால முடியாது அதனால தான் நான் உங்களை இங்கே அழைச்சிட்டு வரல

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now