🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 2️⃣9️⃣
பாவை எதிரிபாரா தருணம் அவள் இதழ்களில் தன் இதழ் ரேகையை பதிய செய்தவன்.. அவளை தன்னோடு இறுக்கி கட்டிக்கொள்ள..
பாவலனின் இந்த செயலை சற்றும் எதிரிப்பாராத சித்ரபாவை அவனை தன் வசம் இருந்து வேகமாக தள்ளிவிட்டப்படி ... பாவலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டவள்...
உங்களுக்கு எவ்ளோ திமிர் இருந்தா ஒரு பொண்ணுகிட்ட இப்படி அசிங்கமா நடந்துப்பிங்க..
என்று கோவமாக சொன்ன சித்ரா மீண்டும் பாவலனை அடிக்க கை ஓங்கியவளின் கரங்களை பிடித்த பாவலனின் இதழ்கள் இந்த முறை சித்ராவின் உள்ளங்கையில் பதிய.... சித்ரா மேலும் கோவம் கொண்டு அவனை தள்ளி விட்டவளை காதலாக தன் மார்போடு அணைத்து கொண்ட பாவலனின் இதழ்கள் இந்த முறை பாவையின் கழுத்தில் பதிந்த தருணம்...
ஐயோ ஐயோ ...குடி முழுகி போக போகுதே என்று SSR கத்தி கொண்டு மொட்டை மாடிக்கு வர.......
SSR குரல் கேட்டதும் சித்ரா தன் வசமிருந்து பாவலனை தள்ளி விட.....
பாவலன் - என்ன சித்தப்பா இது.... எனக்கு ஒரு நல்லது நடக்க விட மாட்டிங்களா.....
SSR - அடேய்... என்னடா.. என்ன பண்ற.... அம்மாடி... இங்க என்ன நடக்குது.... இவன் உன்னை என்ன பண்ணுறான்....
பாவலன் - எங்க பண்ண விட்டீங்க.... அதான் அதுக்குள்ள நந்தி போல வந்துட்டீங்களே...
சித்ரா - ஐயோ முதல்ல நீங்க கீழே போங்க...
பாவலன் - அதான் சித்துவே சொல்லிட்டா இல்ல.... போங்க சித்தப்பா... கீழே போங்க... சின்னஞ்சிறுசுங்க நாங்க கொஞ்ச நேரம் அப்படி இப்படி இருந்துட்டு வரோம்...
சித்ரா - ஹலோ ஹலோ... நான் உங்கள கீழே போக சொன்னேன்
பாவலன் - அதெல்லாம் போக முடியாது.... சித்தப்பா.. நீங்களே இந்த நியாயத்தை சொல்லுங்க...
SSR - டேய்... இங்க எங்கடா நியாமா எல்லாம் நடக்குது....
பாவலன் - ஐயோ சித்தப்பா.... இப்போ நம்ம love பண்ற பொண்ணு... எப்போதுல இருந்தோ நம்மை love பண்ணிக்கிட்டு இருந்து இருக்கான்னு நமக்கு தெரிய வந்தா அந்த கிக் எப்படி இருக்கும்
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....