🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 1️⃣6️⃣
சித்ரப்பாவை - பாருடா.....மாமா காமெடி எல்லாம் பண்றாரு.........
யாரு கால யாரு எடுக்கறது.......உங்களை இந்த ஊருக்கு நான் திரும்ப வர வைத்ததே...உங்க கால் நீதிமன்றத்தில் பதியனும் என்பதற்காக தான் மாமோய்என்று சித்திரப்பாவை சொன்ன தருணம்... சிவகாமியும் சிதம்பரமும் சித்திரப்பாவையை கொலை வெறியோடு பார்க்க.....பாவலனின் கண்களில் மட்டும் சித்திரப்பாவை அழகான தேவதையாக தெரிய...
சிதம்பரம் - ஏய்...யாரு நீ.....
சிவகாமி - அண்ணா... இந்த பொண்ணு தான் நான் மறுபடியும் கோர்ட்டு கேஸ் nnu அலைய காரணம்
சிதம்பரம் - ஓ....அந்த வக்கீல் பொண்ணு நீ தானா
சித்ரா - ஆமா ஆமா நான் தான் இவங்க பொண்ணு.. இப்பயாவது உங்க கண்ணுக்கு தெரியுது இல்ல....
சிவகாமி - என்னது
சித்ரா - சரி மாமோய்.....அது என்ன என்னை அடிக்க ஆள் அனுப்புனவரு...வத்தலும் பொத்தாலுமாவா அனுப்புறது..நல்ல பலசாலியா அனுப்புனா தானே எனக்கு ஒரு கெத்து...
சிதம்பரம் - ஏய் என்ன நான் அனுப்புன ஆளு கிட்ட இருந்து தப்பிச்ச திமிர் ல பேசுறியா
சித்ரா - ஐயோ இல்ல இல்ல நீங்க என்கிட்ட மறுபடியும் வந்து மாட்டிக்கிட்டீங்கன்ற சந்தோஷத்துல பேசுறேன்
சிதம்பரம் - ஏய்...நீ யாரு முதல்ல... என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்...
சித்ரா - உங்கள பத்தி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு வேற யாருக்கும் தெரியாது சீதா...
சிவகாமி - ஏய் என்ன பேசுற....எங்க அண்ணனின் செல்ல பெயர் சீதா nnu உனக்கு எப்படி தெரியும்....
சித்ரா - மேடம்...அந்த சிதம்பர நடராஜர் கோவில் ரகசியம் என்னன்னு வேணா எனக்கு தெரியாம இருக்கலாம்... ஆனா உங்க அண்ணன் சிதம்பரத்தின் ரகசியம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்
சிதம்பரம் - என்ன... என்ன தெரியும் உனக்கு என்னை பத்தி
சித்ரா - அதான் எல்லாமே தெரியும்ன்னு சொல்லிட்டேனே....
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....