🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 1️⃣9️⃣
பாவலன் அத்த ராத்திரியில் செல்போனை நோண்டிக்கொண்டு இருப்பதை பார்த்த ஆறி
என்னடா இந்த நேரத்துல போனை நோண்டிக்கிட்டு இருக்க....பேசாம வந்து படு
பாவலன் - டேய் ஆறி இங்க பாரு...இந்த போட்டோல இருக்குற பையன்.... இவன் தான்....
ஆறி - என்ன இந்த பையனுக்கு என்ன
பாவலன் - டேய் இந்த பையன பாரு
ஆறி - இது சந்தோஷ் தானே
பாவலன் - ஆமாடா அவன் தான்.....
ஆறி - இதெல்லாம் எப்படா எடுத்தது
பாவலன் - நாங்க LAW காலேஜ் ஃபங்ஷனுக்கு போனோம் இல்ல அப்ப எடுத்தது
ஆறி - போட்டோஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்குடா... எப்படியும் அஞ்சு ஆறு வருஷம் ஆகியிருக்கும் இல்ல
பாவலன் - இப்ப அதுவா முக்கியம், இங்க பாரு நான் சொன்னேனே என்னோட வயலின் இப்போ சித்ரா ரூம்ல இருக்குன்னு, அந்த வயலின் இந்த பையன் கையில இருக்கு பாரு
ஆறி - ஆமா... but யாருடா இந்த பையன்...இந்த பையனுக்கு தான் நீ இந்த வயலினை பரிசாக கொடுத்தியா
பாவலன் - ஆமாடா இந்த பையன் தான் சந்தோஷ் உடைய பேமிலி பிரிண்ட் அப்படின்னு எனக்கு அறிமுகப்படுத்தி வச்சான்...இவன் சூப்பரா பாட்டு பாடினான்... அன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள்... அப்பதான் நான் இந்த வயலின அவனுக்கு கிப்ட் பண்ணேன்..அதுவும் இல்லாம இந்த பையன்...
ஆறி - யாருடா இவன்
பாவலன் - இவன் போட்டோவை நான் சிவகாமி மேடம் வீட்ல பார்த்த போதே இவன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு நான் அப்பவே சந்தேகப்பட்டன்டா
ஆறி - இவன உனக்கு தெரியுமா
பாவலன் - தெரியும் டா.....
ஆறி - யாரு இவன்
பாவலன் - இப்போ சித்திரப்பாவை ஒரு கேஸ் நடத்துறா இல்ல...... அந்த கேஸ்ல சம்மந்தப்பட்ட பவானி இவன் தான்
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....