பாகம் 23

52 8 11
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 2️⃣3️⃣

ஆறியின் காரை லாரி மோதியதும்.... சற்றும் தாமதிக்காமல் சித்ரா ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ய......விபத்தில் இன்பா மற்றும் SSR ஆகிய இருவரும் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் இருக்க..... பூங்கொடி மற்றும் ஆறி சிறு காயத்துடன் தட்டு தடுமாறி அந்த காரில் இருந்து வெளியே வர.....
அடுத்து சில நொடிகளில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் இன்பா மற்றும் SSRaiஅவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல.....
சித்ரா தனது காரில் ஆறி மற்றும் பூங்கொடியை அழைத்து கொண்டு ஆம்புலன்ஸை பின் தொடர...

மறுபக்கம் பவானியின் பங்களாவில் அம்பலத்தான் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருந்தவன் கண் எதிரில் நின்று இருந்த பாவலன்....

ஐயோ சார்... என் பேமிலி members kku ஏதோ ப்ரோப்லேம் போல... நான் உடனே கிளம்புறேன்....

என்று பாவலன் சொன்னவன் வேகமாக அந்த பங்களாவை விட்டு வெளியேறியவனை பின்த்தொடர்ந்து வந்த ரங்கநாதன்

இரு பாவலா நானும் வரேன்.... யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே.... நீ முதல்ல உன் அண்ணனுக்கு CALL பண்ணுப்பா நான் உன் காரை டிரைவ் பண்றேன்...

என்று ரங்கநாதன் சொல்ல..... பாவலன் தன் கார் சாவியை ரங்கநாதனிடம் தந்தவன் பதட்டமாக தன் கைபேசி வாயிலாக ஆறியை அழைக்க.... ஆறி பதில் தராமல் இருந்ததால பாவலன் இன்பாவை அழைக்க....அவளும் பதில் தராமல் போன சமயம்...
பாவலன் கடைசியாக முத்துராமனை அழைத்ததும்....முத்துராமன் ஆறியின் கார் விபத்துக்கு உண்டானதை சொல்லி இவர்களை சேர்த்து இருக்கும் மருத்துவ மனையின் முகவரியை சொன்ன அடுத்த சில நிமிடங்களில் ரங்கநாதனும் பாவலனும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய.... அங்கே அவசர சிகிச்சை அறையின் வாசலில் சித்ரா, முத்து ராமன், ரவி தாத்தா மற்றும் இவர்களுடன் பூங்கொடியும் ஆறியும் தலையில் கட்டுடன் அமர்ந்து இருப்பதை பார்த்த பாவலன் பதறி போய் இவர்கள் அருகில் சென்றவன்...

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now