31

3.4K 223 177
                                    

அடுத்த வாரம் அர்விந்தின் வீட்டை அவர்கள் வந்து சேர வீடு வெறிச்சோடி இருந்தது.அம்மாவும் அபினயாவும் யூ எஸ் சென்று நான்கு நாட்களாகியிருக்க வீடோ அவர்கள் இல்லாமல் ஏதோ பாலைவனம் போல இருந்தது.அர்விந்த் ப்ரியாவிடம்

வீட்டிற்கு வந்ததும் வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைத்து நிஷாவை சோபாவில் மர்த்தி வைக்கக்க அவள் ப்ரியாவை கண்டதும் "ம்ம்ம்ம்மா..ம்ம்ம்ம்ம்ம்ம்மா" என்று பேசத்தொடங்கினால்.அதைக்கண்ட ப்ரியாவுக்கு ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அர்விந்தோ இதை அறிந்து ப்ரியாவை பார்த்து முறைக்க அவள் ஏதும் கூறாமல் கண்களில் கண்ணீர் வடிய அவனை பார்த்தால்.ஆனால் இவனோ அவளை சட்டை செய்யாமல் நிஷாவை தூக்கிக்கொன்டு

"நான் வீட்டுக்கு தேவையானத வாங்க போறேன். உனக்கு என்னன்ன வேனும்னு சொல்லு.கூடவே வாங்கிட்டு வரேன்.அப்புறம் எனக்கு நானே சமைச்சுக்குவேன்.உனக்கு சமைக்க தெரியுமான்னு எனக்கு தெரியாது.ஏன்னா ரம்யாக்கு காபி கூட போட தெரியாது.நீ எப்படியோ எனக்கு தெரியல.வேனும்னா நீ கடைல வாங்கிக்க.இல்ல சமைக்க தெரியும்னா சமைச்சு சாப்பிடு.இது இரண்டுமே உனக்கு ஒத்து வரல்லன்னா நானே உனக்கு சேர்த்தும் சமைக்குறேன்.அப்புறம் இதெல்லாம் பார்த்து நான் உன்ன விரும்புறதா நினைக்காத.நான் உன்ன உடல் ரீதியா எந்த விதத்திலையும் காயப்ப்டுத்த மாட்டேன்.ஆனா உன்ன எங்கள நெருங்க விடாம உனக்கு தினம் தினம் தண்டனை  தருவேன்" என்றவனை

"பரவால்ல.நீங்க வீட்டுக்கு தேவையானத மட்டும் வாங்கிக்கோங்க.முடிஞ்சா ஒரு நூடில்ஸ் பக்கட் ஒரு டசன் வாங்கி வாங்க.நீங்க ஆபீஸ் போன பிறகு பசிச்சா நான் போட்டு சாப்பிடுவேன்.நீங்க சொன்ன மாதிரி எனக்கு சமைக்க தெரியாதுதான்.உங்க சமையல்லயே கொஞ்ச நாளைக்கு சாப்பிடுறேன்.வெளில எல்லா வேனாம்.நம்ம முதலிரவு அன்னைக்கு சொன்னதுதாங்க இன்னைக்கும் சொல்ரேன்.நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏத்துக்கிறேன்.ஆனால் உங்கள கெஞ்சி கேட்டுக்குறன்,நிஷா கூட என்ன பழகவிடுங்க.எனக்கு குழந்தைங்கன்னா உசுரு.ப்ளீஸ்.ஐ அம் பெக்கிங்க் யூ (i am begging you)" என்றவளை

என் உயிரினில் நீWhere stories live. Discover now