அரசினால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்ற உயரிய விருதுகளில் ஒன்றான "சாதனை மகுடம்" விருது வழங்கல் நிகழ்வு அந்த மிகப்பெரிய அரங்கினுள் மிகவும் பிரம்மாண்டமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது...
இன,மத,மொழி வேறுபாடுகளின்றி திறமைக்கான அங்கீகாரமாய் மட்டுமாகவே ஒவ்வொரு துறைகளிலும் சாதித்துக் காட்டியவர்களுக்கு அங்கே விருதுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன..விருதுகள் என்பது நம் கடின உழைப்புக்கும் முயற்சிக்குமான அடையாளம் என்பதை விடவும்..அவை நமக்கான ஓர் அங்கீகாரம் என்பதே மிகச் சரியானதாய் இருக்கும்...அப்படியானதொரு நிகழ்வுதான் அங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது...
ஒவ்வொரு துறைகளிலும் பிரகாசித்தவர்களின் வரிசையில் விளம்பரத் துறையினுள் தனியொரு பெண்ணாக சாதித்துக் காட்டிய கீர்த்தனா அந்த வருடத்திற்கான "பெண் சாதனையாளர்"விருதினைப் பெற்றுக் கொள்வதற்காய் ஆனந்தோடு இணைந்து மேடையேறினாள்...அனைவரதும் கைதட்டல்கள் நடுவில் சாதிக்கத் துடிக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாய் அந்தத் தருணத்தினில் மேடையில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...
"இந்த வருடத்திற்கான பெண் சாதனையாளர் விருதினை வென்றெடுத்ததிற்கு முதலில் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..இந்த விருது தொடர்பாக ஓர் சில வார்த்தைகள் எங்களுக்காய்.."
"அனைவருக்கும் வணக்கம்...முதற்கணம் இந்த விருதிற்காய் என்னைத் தேர்வு செய்த குழுவினருக்கும்,இவ்வாறாக வளர்ந்து வரும் ஒவ்வொரு சாதனையாளர்களுக்கும் வருடா வருடம் ஓர் அங்கீகாரம் வழங்கிக் கௌரவிக்கின்ற நம் அரசிற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...உண்மையிலேயே இந்த விருதினை என்னுடைய கரங்களில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது.."
"ஒவ்வொரு ஆணினுடைய வெற்றிக்குப்
பின்னாலும் ஓர் பெண் இருப்பதாகச் சொல்வார்கள்...ஆனால் என் வாழ்க்கையில் அது தலைகீழாகியுள்ளது..ஆம் என்னுடைய இந்த வெற்றிகளுக்கெல்லாம் பின்னே என் நம்பிக்கையாய் என் துணையாய் நிற்பது ஓர் ஆண்...அன்றும் இன்றும் அவன் மட்டுமில்லையென்றால் இன்று இந்த விருது எனக்குச் சாத்தியமாகியிருக்காது என்பதே உண்மை..."
YOU ARE READING
அவனும் நானும்
Romance"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"