அத்தியாயம் : 09

1.2K 51 4
                                    

அன்று இரு விளம்பரங்களையும் முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஆனந்தும் கீர்த்தனாவும்...காரில் மெல்லிசையாய் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,அவர்களிருவரையும் வார்த்தைகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தன...ஒரு கட்டத்தில் அந்த அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கி வைத்தாள் கீர்த்தனா...

"அண்ணா நேற்று என்னோட கல்யாணத்தைப்பத்திக் கதைச்சான்..."என்று சொல்லியவாறே அவள் ஆனந்தை திரும்பிப் பார்க்கவும்,அவனும் அதே நேரத்தில் யோசனை படிந்த முகத்தோடு அவளை நோக்கினான்...

"ம்ம்...அதுக்கு நீ என்ன சொன்னாய்..??.."

"ஏன் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்னு உனக்குத் தெரியாதா...??..."என்று ஆதங்கமாய் கேட்டவளை ஓர்வித அழுத்தத்தோடு நோக்கியவன்,

"சரி அவன் என்ன சொன்னான்...??.."

"..நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா தானும் இப்படியே இருந்திடுறேன்னு உறுதியாய் சொல்லிட்டான்...நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன் ஆனந்...ஆனால் அவன் அவனோட முடிவை மாத்திக்கத் தயாராவே இல்லை...எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை...ஒரே குழப்பமாய் இருக்கு..."

"அவன் மட்டும்தான் அவனோட முடிவில பிடிவாதமாய் இருக்கானா...??.."என்றவனின் வார்த்தைகள் மட்டுமில்லாது அவனது பார்வையும் அவளைத் துளைத்தது...

அவனது கேள்வியில் சிறிது நேரத்திற்கு வாயடைத்துப் போயிருந்தவள்,பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...

"என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு உனக்கு நல்லாவே தெரியும் ஆனந்...எல்லாம் தெரிஞ்சும் நீயும் ஏன் இப்படியே பேசி வைக்குற...??.."என்றவளின் குரல் முழுவதுமாகவே கலங்கிப் போயிருந்தது...

அவளது வலி அவனுக்குப் புரியமாலில்லை..ஆனாலும் அவளது மனதை மாற்றுவதற்கு இதைவிடுத்தால் வேறொரு சந்தர்ப்பம் அமையாதென்ற காரணத்தினால்,இறுக்கத்தைக் கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமலே தொடர்ந்தான் அவனும்..

அவனும் நானும்Where stories live. Discover now