அத்தியாயம் : 08

1.3K 51 2
                                    

ஒரு தேநீர் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு அருகாகவே அமர்ந்து கொண்டான் ஆனந்.. 

"முதல்ல இதைக் குடி..அப்புறம் ஆறுதலாய் அழுதுக்கலாம்..."என்றவனின் வார்த்தைகள் சற்றுக் கோபமாகவே வந்து விழுந்தன...அவள் அழுதால் அவனுக்கு என்றுமே பிடிப்பதில்லை...அதனால்தான் அவளும் அவன் முன்னே இப்போதெல்லாம் அழுது வைப்பதுமில்லை...அப்போதும் அவளது அழுகையை அவனிடமிருந்து மறைக்க முயன்றாள்தான்...ஆனால் அவனிடம் அவளால் அவ்வளவு எளிதில் எதையும் மறைத்துவிட முடியாதே... 

"நான் ஒன்னும் அழல...தலைவலி அதான் அப்படியே கண்ணை மூடிப் படுத்திருந்தேன்.." 

அவள் இப்படிக் கூறிச் சமாளிக்க முயன்றதுமே அவளைக் கூர்மையாய் ஓர் பார்வை பார்த்தவன், 

"ரொம்பவும் கஸ்டப்பட்டுச் சமாளிக்கத் தேவையில்லை...உன்னால என்கிட்ட எப்பவுமே பொய் சொல்ல முடியாது..." 

ஏனோ தெரியவில்லை ஏற்கனவே பழைய நினைவுகளில் கலங்கிப் போயிருந்தவள்,அவனது இந்தக் கோபத்தில் அவளை அறியாமலேயே மீண்டும் கண்ணீரினைச் சிந்தத் தொடங்கிவிட்டாள்... 

அவளின் கண்ணீர் அவனுக்குள்ளும் சொல்ல முடியாத ஓர் வலியினை ஏற்படுத்த,மெதுவாய் அவளின் கண்ணீரினைத் துடைத்துவிட்டவன்,அவளை அதற்கு மேலும் அழ வைத்துப் பார்க்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்...ஆனால் அவனை அங்கிருந்து நகர விடாது அவளின் கரம் அவனது கரத்தைப்பற்றி நிறுத்தியது... 

அப்படியே அவளின் கரத்தை தன் கைக்குள் வைத்தவாறே அவளருகே அமர்ந்தவன்,என்னவென்று விழிகளாலேயே கேட்டான்...அவன் கேட்டதுமே அவனையே சிறிது நேரத்திற்குப் பார்த்தவள்,கலங்கிவிட்ட குரலில், 

"உன் தோளில் 
கொஞ்சநேரம் சாஞ்சுக்கட்டுமா ஆனந்..??.." 

அவளது விழிகள் அவனிடத்தில் அன்னையின் அன்பையும்,தந்தையின் அரவணைப்பையும் தேடுவதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது...அவள் கேட்ட மறுநொடியே அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டவன்,அவளின் முகத்தினில் தோன்றிய நிம்மதியைக் கண்டவாறே தானும் மெதுவாய் கண்களை மூடிக் கொண்டான்... 

அவனும் நானும்Donde viven las historias. Descúbrelo ahora