அதிகாலை மூன்று மணியிருக்கும்...தண்ணீர்த்தாகம் எடுக்கவே,அறையைவிட்டு வெளியே வந்தான் ஆனந்...அப்போது அங்கே வெளிப்புறமாய் இருந்த பல்கனியில் கீர்த்தனா அங்குமிங்குமாய் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டவன்,
"இவள் இன்னும் தூங்காமல் இங்க என்ன பண்ணிட்டிருக்காள்.."..என்ற கேள்வியோடே அவளை நோக்கிச் சென்றான்...
"கீர்த்து.."என்று அவன் அழைத்ததும் திரும்பிப் பார்த்தவள்,எந்த பதிலுமின்றி மீண்டும் அவளது சிந்தைக்குள்ளேயே மூழ்கிக் கொண்டாள்...
"என்னாச்சு இவளுக்கு என்னமோ மந்திரிச்சு விட்ட மாதிரி நிற்குறாள்..."என்ற குழப்பத்தோடே அவள் முன்னே போய் நின்று கொண்டான்...ஆனால் அப்போதும் அவள் எதையோ யோசித்த வண்ணமாகவே இருந்தாள்..
"ஹேய் கீர்த்து..என்னடி ஆச்சு..??..இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டிருக்க...??.."
அவன் கேட்டதும் சில மணித்துளிகளிற்கு மௌனம் சாதித்துக் கொண்டவள்,பெருமூச்சொன்றினை வெளிவிட்டவாறே மெதுவாய் தொடர்ந்தாள்...
"ஹ்ம்...நான்தான் என்னோட காதலை அண்ணாகிட்டயிருந்து மறைச்சன்னா...அவனும் என்னை மாதிரியே அவனோட காதலை என்கிட்டயிருந்து மறைச்சிட்டான் ஆனந்..."
"என்னடி சொல்லுற...அஸ்வின் லவ் பண்றானா...??..
"ம்ம்...உனக்கு அவனோட ப்ரண்ட் ஸ்ருதியைத் தெரியும் ல..??.."
"ம்ம்...தெரியும்...ஏன் அஸ்வின் ஸ்ருதியைத்தான் காதலிக்குறானா..??.."
"ம்ம்...காலேஜ்ல படிச்ச காலத்தில இருந்தே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சிட்டிருக்காங்க.."
"ஆனால் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்..??.."
"இன்னைக்கு பீச்சுக்குப் போனப்போ...அங்க அவங்களைப் பார்த்தேன்...எதேட்சையா அவங்க இரண்டு பேரும் பேசிட்டிருந்ததை கேட்ட போதுதான் எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க முடிஞ்சுது..."
"ஆனால் அவன் ஏன் இதைப்பத்தி எங்ககிட்ட எதுவுமே சொல்லல...??.."
YOU ARE READING
அவனும் நானும்
Romance"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"