அத்தியாயம் : 13

1.3K 51 17
                                    

கல்லூரியின் கன்டீனுக்கு வெளியே போடப்பட்டிருந்த மர பென்ஞ்சில் அமர்ந்திருவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் கீர்த்தனாவும் அவளது தோழிகளும்...

"ஹேய் கீர்த்து இந்த வீக்கென்ட் ஆச்சும் எங்க கூட வெளியே வருவியா மாட்டியா...??..."

"ஹ்ம்...நான்தான் உங்ககிட்ட முதலே சொல்லியிருக்கேனே...இந்த வீக்கென்ட்னு இல்லை எந்த வீக்கென்டுக்கும் நான் எங்கேயும் வரமாட்டேன்...அந்த இரண்டு நாளுமே மொத்தமாய் என் குடும்பத்துக்காக நான் செலவிடுற நேரம்...அதனால அந்த இரண்டு நாளைக்கு மட்டும் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க...ப்ளீஸ்.."

"இவளைப்பத்திதான் உனக்குத் தெரியுமே ப்ரீத்தி...அப்புறமும் எதுக்குத் தேவையில்லாமல் உன் எனேர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க...??..."என்று சௌமி கோபமாய் கொந்தளிக்கவும்,

"ஹேய் நான் என்ன உங்க கூட வெளிய எங்கேயுமே வரமாட்டேன்னா சொன்னேன்...சனி,ஞாயிறு மட்டும் என்னை எதுக்கும் கேட்காதீங்கன்னுதானே சொன்னேன்.."

"சரிம்மா...சரி...இனி உன்னை வீக்கென்ட்ல நாங்க தொந்தரவு பண்ணல
போதுமா..??.."

"அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டேதான் சொல்லேன்டி..."

"ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...போதுமா..??.."

"இதுக்கு நீ சிரிக்காமலே
இருந்திருக்கலாம்..."

"உங்க சண்டையை அப்புறமா ஆறுதலாய் வைச்சுக்கோங்க...இப்போ எனக்கு ஏதாச்சும் கூலா குடிக்கனும் போலருக்கு...ஐஸ்கிறீம் குடிக்கலாமா..??.."

"நீங்க இரண்டு பேரும் வேணும்னா ஐஸ்கிறீம் குடிங்க...நான் கொஃபி குடிக்கிறேன்..."என்று அறிவித்தாள் கீர்த்தனா..

"நீ இருக்கியே...உன் டேஸ்ட் ஏன்டி இப்படி எல்லாத்திலையுமே விசித்திரமாவே இருக்கு...யாராவது இந்த உச்சி வெய்யில்ல போய் கொஃபி குடிப்பாங்களா..?.."

"யார் குடிக்குறாங்களோ இல்லையோ நான் குடிப்பேன்...அது விசித்திரமாய் இருந்தால் இருந்திட்டுப் போகட்டும்..."

அவனும் நானும்Where stories live. Discover now