அத்தியாயம் : 12

1.3K 51 6
                                    

....அவனும் நானும்....

அத்தியாயம் : 12

அவளின் நினைவுகள் பின்நோக்கிச் செல்வதை உணர்ந்து கொண்டவன்,அவளது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதற்கு மேல் எதுவும் பேசாது அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்..

"சரி அப்படியொரு சம்பவம் நடக்கும் போது நடக்கட்டும்..இப்போ நீ போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..சரியா..??..."

"...ம்ம்..."

அவளது மனமும் அப்போது தனிமையை வேண்டிக் கொண்டதால்,அவளும் மறுபேச்சின்றியே உறங்குவதற்காய் அறையினுள் நுழைந்து கொண்டாள்..ஆனால் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு நிகழ்காலம் மெது மெதுவாய் கண்களை விட்டு அகல,அவளின் கடந்தகாலம் அவளின் கண்முன்னே விரிந்தது...

அன்றோடு அக் கல்லூரிக்கும் அவளுக்குமான பந்தம் ஆரம்பித்து முழுதாக முப்பது நாட்கள் கழிந்திருந்தன...ஆரம்பத்தில் சௌமியோடு மட்டுமாகவே ஒட்டிக் கொண்டு திரிந்தவள்,அதன் பின் மெது மெதுவாய் அனைவரோடும் ஐக்கியமாகிக் கொண்டாள்...

ராக்கிங் அனைத்தும் முந்தைய நாளோடே முடிந்திருந்ததால்,அன்று அவளிற்கு மிகவும் பிடித்தமான நீல நிறச் சுடிதாரில் வந்திருந்தாள்...சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் அவளிற்கு மிகவுமே பிடித்தமான உடையினை அணிந்து கொண்டதால் அன்று வழமையை விடவுமே கொஞ்சம் சந்தோசமாக இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்...ஆனால் அவளின் அந்த ஆனந்தம்தான் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கவில்லை....

கடந்த இரண்டு நாட்களாய் மழையின் தாக்கம் அதிகமாய் இருந்ததால் கல்லூரியின் சாலைகளில் அங்கங்கே மழைநீரும் தேங்கியே காணப்பட்டது...அவள் என்னதான் அதிலிருந்து கவனாய் ஒதுங்கியே வந்தாலும்,கடவுள் அவளிற்கு அன்று மழைநீரால் அபிசேகம் செய்வதென்று முடிவெடுத்துவிட்டார் போலும்...அவளைக் கடந்து சென்ற வேகமான பைக் அவள் மீது மொத்தமாய் மழைநீரோடு இணைத்து சேற்றையும் வாரியிறைக்க,அவளின் நீலநிறச் சுடிதார் ஒரு விநாடிக்குள்ளாகவே உருமாறிப் போனது...

அவனும் நானும்Where stories live. Discover now