அத்தியாயம் : 15

1.3K 37 20
                                    

   ....அவனும் நானும்....

அத்தியாயம் : 15

அன்று கல்லூரிக்குள் நுழைந்ததிலிருந்தே அவளது விழிகள் அவனை மட்டுமாகவே தேடிக் கொண்டிருந்தன...ஆனால் அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதைத்தான் அவளால் இன்னும் சரியாகவே புரிந்து கொள்ளவே முடியவில்லை....

ஆனந்தோடு கதைத்த பின்னர் தன் மனதில் தோன்றியிருந்த ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதில்களைத் தேடியவளுக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்...அவளுக்கு இந்த கண்டவுடன் காதலில் எல்லாம் என்றுமே நம்பிக்கையிருந்ததில்லை...அதனால்தான் என்னவோ அவன் மேல் அவளுக்குள் எழுந்த உணர்வுகளுக்கெல்லாம் பெயர் காதலென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளின் உள்ளம் தவித்தது...

அவனை அவள் இரண்டு தடவைகள்தான் பார்த்திருக்கிறாள்...ஓர்முறை அருகாய் ஓர் முறை தூரமாய் என்று மட்டுமாகவே பார்த்தவளின் மனதிற்கு அவ்வளவு எளிதாக ஒருவனால் நெருக்கமாகிக் கொள்ள முடியுமா என்ற கேள்வியே அவளுள் மீண்டும் மீண்டுமாய் எழுந்ததில் இதுதானென்று ஓர் முடிவிற்கு வரமுடியாமல் குழப்பத்திற்குள் சிக்கிக் கொண்டு முழித்தது அவளின் உள்ளம்...

அன்று ஆனந் சொன்னது போல் கண்ணை மூடி நன்றாக யோசித்தும் பார்த்துவிட்டாள்...ஆனாலும் அவனுரைத்தது போல் அவளால் எந்தவொரு முடிவையும் தெளிவாக எடுத்துவிட முடியவில்லை...இறுதியில் இனி அவனின் நினைவே வேண்டாம் என்ற முடிவோடுதான் இன்று கல்லூரிக்கே வந்திருந்தாள்...ஆனால் அறிவிற்கு ஆணித்தரமாய் அவனின் எண்ணங்கள் வேண்டாமென்று புரிய வைத்திட முடிந்த அவளால் மனதிற்கு புரிய வைத்திட முடியவில்லை...

என்னதான் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும்,அவள் உடலின் அத்தனை அணுக்களும் அவனுக்காய் ஏங்கத்தான் செய்தன...அவனின் அந்த இருவிழிப் பார்வைக்குள் சிறைப்பட்டுக் கொள்வதற்காய் அலைபாயத்தான் செய்தன...அதனால் இயன்றவரையில் தன்னை அடக்கி பார்வையை அவள் வேறுபுறமாய் திருப்ப முயன்ற நேரத்தில் அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளின் விழிகளைத் துளைத்துக் கொண்டு அவளிற்குத் தரிசனம் தந்தான் அவன்...

அவனும் நானும்Where stories live. Discover now