அத்தியாயம் : 14

1.6K 43 13
                                    

"...உன் விழிகளுக்குள்
என் விழிகள் வீழ்ந்ததில்
இடம்மாறிக் கொண்டது
நம் பார்வைகள் மட்டும்தானா..??
இல்லை நம்மிருவர்
இருதயங்களுமா..??..."

எப்படி எப்படியெல்லாமோ புரண்டு பார்த்தாள்,விழிகளை நன்றாக இறுக்கி மூடியும் பார்த்தாள்...ஆனாலும் அவள் அழைத்த உறக்கம் மட்டும் அவளைத் தழுவிடாது சோதித்துக் கொண்டேயிருந்தது...இறுதியில் அவளது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவள்,பல்கனிப் பக்கமாய் போய் நின்று கொண்டு இருட்சியை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்...ஆனால் அவள் மனமோ அவனின் இருவிழிகளுக்குள் மட்டுமாகவே மாட்டிக் கொண்டு முழித்தது..

இன்று அவளுக்குள் எழுந்திருக்கும் இந்த உணர்வலைகளை அவள் இதற்கு முன் என்றும் அனுபவித்ததில்லை...இப்படியான இம்சைகள் எல்லாம் அவளுக்குப் புதிதானது...இந்த இருபத்தியொரு வருடங்களாய் எதற்குள்ளுமே சிக்கிக் கொள்ளாமல் கடந்து வந்தவளால்,அந்த ஒரு விநாடியைக் கூடக் கடந்து சென்றிட முடியாது திண்டாடிக் கொண்டிருந்தாள்...

எங்கு திரும்பினாலும்,எதைப் பார்த்தாலும் அவனொருவனின் விழிகள் மட்டுமே அவளை ஆக்கிரமித்துக் கொண்டதில்,வாழ்வில் முதற்தடவையாக எதுவென்றே சொல்லிட முடியா ஓர் இன்ப அவஸ்த்தைக்குள் அவள் கொஞ்சம் கொஞ்சமாய் சிறைபட்டுக் கொண்டிருந்தாள்...ஆனால் அந்தச் சிறை கூட அவளிற்குப் பிடித்தமானதாக இருந்ததுதான் அவளிற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்து வைத்தது...

அவனது விழிகளால் அப்படி என்னதான் மாயங்களைச் செய்தானோ தெரியவில்லை,அந்த மாயவிழிப் பார்வைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறிப் போனதென்னவோ அவள்தான்...அவன் பார்வை கூறிய மொழிகளை அவள் மீண்டும் மீண்டுமாய் மனதிற்குள் படித்துப் பார்த்தும் அதன் அர்த்தங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவளாய் குழம்பிப் போய் நின்றாள்...

ஆனால் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை,குழம்பி நின்றது அவள் மட்டுமல்ல...அவனும்தானென்று...ஆம் அவனின் இருவிழிப் பார்வை அவளின் இராத் தூக்கத்தை சிறை வைத்ததென்றால்,அங்கே விடுதியில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தவனின் இருதயத்தை என்றோ சிறைப்பிடித்திருந்தது அவளின் இருவிழிப் பார்வை...

அவனும் நானும்Where stories live. Discover now