அன்று கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே அவளின் மனம் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது...ஒரு பக்கம் அவன் அவளைச் சீண்டியிருந்தானென்றால்,இன்னொரு பக்கம் ப்ரீத்தி அன்று முழுவதுமே அவனினதும் அவளினதும் சிறுவயதுப் புராணத்தினை மட்டுமாகவே பாடி அவளின் கோபத்தினை இன்னுமாய் மிகைப்படுத்தியிருந்தாள்...
அதிலும் அவள் நொடிக்கொரு முறை அவனை அத்தான் அத்தானென்றே விளித்துக் கொண்டிருந்ததில் அவளின் சினம் எல்லையைக் கடந்திருந்தது...இறுதியில் அவள் தன் கல்லூரிப் படிப்பினை முடித்ததுமே அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகிவிட வேண்டியதுதான் என்று சொன்னது வேறு அவளின் உள்ளத்தை பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருந்தது...
மனமெங்கும் பரவிக்கிடந்த சினத்தில் கண்ணாடிக்கு முன் நின்று அவனையும்,ப்ரீத்தீயையும் ஆத்திரம் தீரும் வரையில் திட்டித் தீர்த்துக் கொண்டவள்,லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த கண்ணீரோடு கட்டிலில் வந்து விழுந்தாள்...அப்போது அவளின் மனநிலையை அறிந்திராத அவளின் தொலைபேசி அவள் முதல் நாளில் அவனை நினைத்து வைத்த பாடல் வரிகளோடு ஒலித்தது...
"...மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்...
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்..."எரிச்சலோடு வந்த அழைப்பினைப் பார்க்காமலேயே கட் செய்தவள்,மனதிற்குள் மீண்டுமாய் சிணுங்கிக் கொண்டாள்...
"ஆமா இப்போ அவனுக்காக இந்தப் பாட்டு ஒன்னைத்தான் நீ வைக்காத குறை...இவனைப் போய் கடுவன் பூனைன்னு நினைச்சியே கீர்த்து...அவன் சரியான காதல் மன்னனா ல இருப்பான் போல..."
"நாம கிருஷ் கூடப் பேசினால் மட்டும் அப்படியே தூர நின்னுக்கிட்டே கண்ணாலேயே மற்றவங்களோட மனசை பொசுக்க வேண்டியது...ஆனால் தான் மட்டும் யார்கூட வேணும்னாலும் சிரிச்சு சிரிச்சு பேசலாம்...இது எந்த ஊர் நியாயமோ..??.."
அவன் பேசியது யார் கூடவோயில்லை அவனது சொந்த முறைப் பெண்ணுடன்தான் என்பதை அவளின் ஒருபக்க மனம் அழுத்தமாய் கூறினாலும் கூட அவன் மீதான அர்ச்சனையை அவள் நிற்பாட்டுவதாகவுமில்லை...
YOU ARE READING
அவனும் நானும்
Romance"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"