அன்று ஓர் வெள்ளிக்கிழமை நாள் என்பதால் வழமை போலவே அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காய் பூஜைப் பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார் சீதா...அதைப் பார்த்தவாறே படிகளில் இறங்கி வந்தவன்,தந்தையிடம்...
"இன்னைக்கு அவங்களை நானே கோயில்ல விட்டிறேன்...வெளிய காரில்ல வெயிட் பண்றேன்..தயாரானதும் வரச் சொல்லுங்க..."என்றவாறே வெளியே சென்றுவிட்டான்...ஆனால் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ராம் சீதா இருவருக்குமே தங்கள் காதுகளையே ஓர் நிமிடம் நம்ப முடியவில்லை...
கார்த்திக்கும் சிறுவயதிலிருந்தே சீதாவோடுஅந்த அம்மன் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவன்தான்..ஆனால் அவன் மொத்தமாகவே மாறிய பின் அங்கு செல்வதையுமே நிறுத்தியிருந்தான்...அதிலும் இத்தனை வருடங்களாய் தாயோடு முகம் கொடுத்தே பேசாதவன்,இன்று அவனாகவே வந்து கோயிலில் விட்டுவிடுவதாகச் சொன்னதும் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது...
அவனில் தோன்றிய இந்த சிறிய மாற்றமே அவரிற்கு அவன் பழையது போலவே மாறிவிடுவான் என்ற நம்பிக்கையைத் தர அமைதியாகச் சென்று அவனது காரினில் ஏறிக் கொண்டார்...கோவிலில் அவரைக் கொண்டுவந்து விட்டதுமே அக் கோவிலை நிமிர்ந்து ஓர்வித ஏக்கத்தோடு பார்த்தவன்,தரிசனம் முடிந்ததும் தனக்கு அழைப்பெடுக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்...ஆனால் அதையும் அவன் எங்கேயோ பார்வையைப் பதித்தவாறுதான் சொன்னான்...இருந்தும் அவனில் தோன்றிய இந்தவொரு மாற்றமே சீதாவிற்கு அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது...
அவன் கூடிய விரைவில் தன் பழைய கிருஷ்ணாவாக மாறிவிட வேண்டுமென்று வேண்டிக் கொண்டவாறே கோவில் படிகளில் ஏற ஆரம்பித்தார்...நூறு படிகளைக் கடந்தால்தான் சக்திவாய்ந்த அந்த அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்...வயதின் காரணமாக மெது மெதுவாகவே படிகளில் ஏறிக்கொண்டிருந்தவரின் கால் ஒருகட்டத்தில் இடறவும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு ஓரமாய் நின்றவர்,பூஜைத் தட்டினைக் கரங்களில் இருந்து தவறவிட்டுவிட்டார்...ஆனால் அத் தட்டு கீழே விழும் முன்னதாகவே இரு கரங்கள் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டன...
YOU ARE READING
அவனும் நானும்
Romance"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"