ஹோலில் அமர்ந்து மும்முரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தவர்கள்,கீர்த்தனாவின் அரவம் தெரியவும் மௌனம் காத்துக் கொண்டார்கள்...இதே வேறொரு நாளாக இருந்திருந்தால் தன் பெற்றோர்களின் முகத்தினில் குடியிருந்த கவலையினை அவளும் கவனித்திருப்பாளோ என்னவோ...அன்று கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டிய பரபரப்பில் இருந்ததால் அவள் அதைக் கவனித்திருக்கவுமில்லை...
"என்னம்மா இவ்வளவு ஏர்லியாக் கிளம்பிட்ட..??.."
"ஒன்பது மணிக்கு முன்னாடி போய் அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும் பா..."
அவள் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின்னும் அங்கே தயாராகி வந்து சேர்ந்தான்..
"நீ எங்கடா கிளப்பிட்ட..??..."
"கொஞ்சம் ப்ரொஜெக்ட் வேலை இருக்கு மா...நைட் வரவும் லேட்டாகும்...நீங்க எனக்காக காத்திட்டிருக்காமல் சாப்பிடுங்க...சரியா..??.."என்றவன் அப்போதுதான் கீர்த்தனாவைக் கவனித்தவனாய்,
"ஆமா நீ எங்கடி ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகி நிக்கிற...எப்பவுமே உனக்கு விடியுற நேரமே எட்டு மணிதானே..இன்னைக்கு மட்டும் என்ன புதுசா இவ்வளவு அதிகாலையிலேயே எழும்பிட்ட.??.."என்று அவன் அவளைக் கேலி செய்யவும்,
"ஏன் உனக்கு மட்டும்தான் வேலை இருக்குமா...எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா..??.."என்று அவள் பதில் சண்டைக்குத் தயாராகவும் இடையில் குறுக்கிட்ட பார்வதி,
"கடவுளே...இரண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிக்காமல் சீக்கிரமாய் கிளம்புற வழியைப் பாக்குறீங்களா..."
"ஹலோ மிஸஸ் ராகவன் உங்க பையன்தான் முதல்ல ஆரம்பிச்சான்...அவனை முதல்ல பேசாமல் போகச் சொல்லுங்க..."
"ஆமா இவ பெரிய மகாராணி...இவ சொன்னால் நாங்க அதைக் கேட்டுக்கனுமாக்கும்..."
அவர்கள் அப்படியே பதிலிற்கு பதிலென்று சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே சென்றதில்,ஏற்கனவே லேசாக ஆரம்பத்திருந்த பார்வதியின் தலைவலி இன்னும் அதிகரித்தது...ஆனால் ராகவனோ அவர்கள் சிறுபிள்ளைகள் போல் போட்டுக் கொண்டிருந்த சண்டையினை ரசித்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்...
YOU ARE READING
அவனும் நானும்
Romance"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"