அத்தியாயம் : 07

1.4K 55 2
                                    

முன்னே இரு பக்கமும் அழகாய் பரமாரிக்கப்பட்டிருந்த பூந்தோட்டமும்,பின்னே மிகவும் நீளமான நீச்சல் தடாகத்தையும் கொண்டு நடுவே அந்த வீடு மிகவும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது...அந்த வீட்டின் அனைத்து அறைகளுமே அமைதியில் நிறைந்திருக்க அவளது அறையினில் மட்டும் அலாரம் மணி ஆறு என்பதினை நினைவுபடுத்துவதாய் அலறியடித்துக் கொண்டிருந்தது...

கண்களிரண்டையும் இறுக்கமாய் மூடிக் கொண்டவாறே அலாரத்தின் ஒலியினை நிறுத்தியவள்,எழும்பும் எண்ணமேயில்லாமல் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள்...

"கீர்த்துமா...எழுந்திருடா....இன்னைக்கு கல்லூரிக்கு முதல் நாள்...சீக்கிரமா எழுந்து ரெடியாகுடா..."என்றவாறே கையில் சுடசுடச் தேநீரோடு உள்நுழைந்தது கீர்த்தனாவின் தாயார் என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு...வந்தது அவளின் தந்தை ராகவன்...

கீர்த்தனா எப்போதுமே அப்பா ராகவனின் செல்லம்தான்...அதே போல் அம்மா பார்வதி அஸ்வின்னின் பக்கம்...சிறுவயதிலிருந்தே அவளிற்குத் தேநீர் கொடுத்து எழுப்புவது ராகவன்தான்...இருபத்தொரு வயதாகியும் அவளாலும் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை...அவருக்குமே அவளின் முகத்தில் விழிக்காமல் அன்றைய நாள் முழுமையடைந்ததில்லை...

தந்தையின் குரலைக் கேட்டதுமே கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தமர்ந்தவள்,கண்களை மெதுவாய் திறந்து அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்...

"குட்மோர்னிங் பா.."

"வெரி குட்மோர்னிங் டா...டீ ஆறிடப் போகுது...போய் சீக்கிரம் பல்லைத் துளக்கிட்டு வந்து குடி...நான் போய் உன் சாப்பாடு ரெடியான்னு பார்க்குறேன்..."என்றவாறே அவர் வெளியேறவும் இவளும் குளியறைக்குள் புகுந்து கொண்டாள்...

கீழே வந்தவர்,சமையலறையில் அங்கும் இங்குமாய் சுழன்று கொண்டிருந்த பார்வதிக்கு உதவியாய் காய்கறிகளை எடுத்து வெட்டத் தொடங்கினார்...

அவனும் நானும்Where stories live. Discover now