01

68.2K 394 79
                                    

நான் உன்னை தேடும் 
வேளையிலே 
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்
நல்லை அல்லை 
நன்னிலவே நீ
நல்லை அல்லை..

ஷிட்...கமான்....கமான்...யப்பா கணேஷா ஸ்டார்ட் ஆக்கிடு..ப்ளீஸ்..ப்ளீஸ்..எவ்வளவு முயன்றும் அவளது ஸ்கூட்டி கொஞ்சம் கொஞ்சமாய் கனைத்து விட்டு அமைதியானது...பாக்யா...ஏன்டீ நடுரோட்ல வச்சு உயிரை வாங்குற...என் செல்லம்ல...பாக்கை திறந்து போனை எடுத்து நேரத்தை பார்த்தவள்..ஐயையோ   பிப்டீன் மினிட்ஸ்தான் இருக்கே...கொய்யால இப்போ சதி பண்ணுதே..ரீசன்ட் கால் லிஸ்ட்டில் வைஷுவை தேய்த்து காதிற்கு கொடுத்தாள்.

ஸ்கூட்டியை ஒரு மரத்தின் கீழ் நிறுத்திவிட்டு அருகே கிடந்த கல்லின் மேல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவளின் அருகே ஒரு கார் வந்து நின்றது..ஆரஞ்ச் சுடியும் வொய்ட் ஷாலுமாய் ஒற்றைப் பின்னலை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு ட்ரைவிங்க் சீட்டில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் துளியும் சிரிப்போ மலர்ச்சியோ..இல்லை. கல்லிலே அமர்ந்திருந்தவளை பார்த்து ஏறு..என்றாள். அவள் முகத்தை பார்த்தே மூடைக் கணித்தபடியால் அவளிடம் எதுவுமே பேசாமல் இவள் ஏறி அமர்ந்து கொள்ள வண்டி பறந்தது.

வைஷ்ணவிக்கு எரிச்சலாய் இருந்தது..என்னதான் உயிர் நண்பி என்றாலும் பண்ணுகிற கிறுக்குத் தனத்திற்கு ஒரு அளவு வேண்டாம்..அவளின் பியன்ஸி பரத் ஊரிலிருந்து வந்திருக்கிறான் அவனுடன் நேரம் செலவிட முடியாமல் ப்ரண்ட் என்ற பெயரில் பக்கத்தில் உட்கார்ந்து வரும் பேமானி செய்யும் அழிச்சாட்டியத்திற்கு வர வர அளவே இல்லாமல் போய்விட்டது.

வைஷு....வைஷு....வைஷ்...ஏன்டி உர்ருன்னு வர்ர பேசேன்..வைஷ்... பல்லை கடித்த வைஷ்ணவி தோ பாரு வாயை மூடிட்டு வரல்லைனா இங்கேயே இறக்கிவிட்டுட்டு திரும்பிப் பாக்காம போய்ட்டே இருப்பேன்...எப்டி வசதி..ரொம்பத்தான் சிலுத்துக்குற ம்க்கும்..வாயை கோணி பழிப்புக் காட்டி விட்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டாள். இருக்கற காண்டுக்கு செஞ்சாலும் செஞ்சிடுவாள்..எதுக்கு வம்பு.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now