மழைச் சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன
ஒரு பார்வையால கொன்ன..!!தென்னை மரங்கள் சூழ நின்றிருந்த அந்த நீச்சல் தடாகத்தின் நீர் மேற்பரப்பினை காற்று தழுவி மேலெழுந்து வீசியதால் அந்த இடம் கொஞ்சம் குளுமையாய் வெயில் கனன்று முடித்திருந்த பகற் பொழுதிற்கு இதமாய் இருந்தது. அசைவுகளைச் சொன்னபடி காமிரா மேன் கிளிக்கித் தள்ள சுற்றிலும் மற்றவர்கள் நின்றிருந்தார்கள். ஓஹ்...இப்பதான் ஸ்டார்ட் பன்ட்ராங்களா..போட்டோஷுட் நடக்குது போல மனதினுள் எண்ணியபடி அவனைத்தேடி விழிகளை அவசரமாய் அலசினாள். வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு உடலில் தண்ணீர் சொட்ட சொட்ட ஸ்விம்மிங்க் பூளின் ஹான்ட்ரைலை பிடித்தபடி ஒரு பக்கமாய் சாய்ந்து காமிராவை பார்த்தபடி அமர்ந்திருந்தவனை பார்த்ததும் முக்கியமாய் அவன் விழிகள்..அதனைப் பார்த்ததும்..அதற்குத்தான் கடவுள் எத்தனை கவர்ச்சியை கொடுத்திருக்கிறார் என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அவனைப் பார்க்க வேண்டும்...பார்க்க வேண்டும்..என்ற எண்ணத்துடனேயே வந்ததால் முதலில் அவள் கண்களுக்கு விஷ்ணுதான் தெரிந்தான். அதன் பின்தான் அவன் அருகே இருப்பவளை கவனித்தாள். அவளை எங்கும் பார்த்ததாய் நினைவில்லை புதுமுகமாய் இருக்க வேண்டும்..அழகாய் மொழு மொழுவென்று மெழுகு சிலை போல ஒல்லியாய் வாளிப்பாய் உடலை இறுக்கிப்பிடித்திருந்த உடை தொப்பலாய் நனைந்து அவள் அங்கங்களை அளவெடுத்திருக்க சரிவாய் சாய்ந்து அவன் தொடையில் தன் முழங்கை ஊன்றி மந்தகாசமாய் முறுவலித்து நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் பழைய பாடலொன்றின் பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ..வரிதான் ஜோதிக்கு நினைவு வந்தது.
மேடம் அப்டியே இன்னும் கொஞ்சம் நெருக்கமாய்...சாரோட காலுக்கு நடுவுல..யாஹ்..கைய இப்டி ரெண்டு கால்லயும் வச்சுக்கோங்க..குட்..ஓகே நெக்ஸ்ட்..சார் கொஞ்சம் குனிஞ்சு உங்க முகத்தை அவங்க முகத்தோட சேர்த்து வச்சுக்கோங்க..பர்பக்ட்...மீண்டும் ஒரு க்ளிக்..அப்டியே சாரோட மடில...கண்கள் சிவக்க.. தன் பக்கமாய் முதுகு காட்டி நின்றிருந்த காமிரா மேனை முறைத்தாள் ஜோதி. அப்டியே உன் பேக்ல ஓங்கி உதைச்சேன்னு வைய்யி தண்ணிக்குள்ள சளக்குன்னு விழுந்து தத்தளிச்சுட்டு கெடப்பே..ராஸ்கல்..மனசுக்குள் பொறுமியவள் அதற்குமேல் அந்த கண்ட்ராவியை காண சகியாது திரும்பப் போனவள் ஏதோ உறுத்த மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
YOU ARE READING
தீயோ..தேனோ..!!
Romanceகாதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே...