40

11K 305 134
                                    

நீ யார்..நான் யார்
இனம் மொழி இடம்
மறந்து போவோம்
புவி ஈர்ப்பு மையத்தை
கடந்து போவோம்
புது லோகம் பறந்து போவோம்
முத்தத்தின் சத்தத்தில்
உடைந்து போவோம்
முக்தி நிலை அடைந்து போவோம்..!!

காரில் உடைகளும் அவள் பொருட்களும் அடங்கிய பெரிய சைஸ் பேக்கினை வைத்து டிக்கியை பூட்டியவன் ஜோதியும் சரசுவும் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பினான். யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை தான் போவதை யாரிடமும் சொல்லவுமில்லை. குமாரை அழைத்து ஹார்ட்வேரை ஒப்படைத்து கீயை கொடுத்த போது நீ எங்கக்கா போறேன்னு அவன் கேட்டான். கொஞ்ச நாளைக்கு வெளியூர் சென்று மனசை சரிப்படுத்திக் கொண்டு வருவதாய் சொல்லி சரசுதான் சமாளித்தாள். அதையே சந்தோஷிற்கும் ஒரு மெஸேஜாய் தட்டி விட்ட போதும் இந்த விஷயம் வெளியாகும் போது எல்லோரும் எப்படி ரியாக்ட் செய்வார்கள்  என்பதை அவளால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.

பின்னால் தலை சாய்த்து கண்களை மூடியபடி இருந்தவளின் கையினைப் பற்றிக் கொண்டு அருகிலேயே அமைதியாய் அமர்ந்திருந்தாள் சரசு.
முகம் வேதனையாய் கசங்கி இருக்க கண்களில் நீர் வழிந்தோடியது.
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் வீவ் மிரரில் அடிக்கடி ஜோதியையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
சரசுவைப் பொறுத்தவரை ஜோதி செய்ததில் வைஷுவைப் போல அவளுக்கும் சுத்தமாய் உடன்பாடு இல்லைதான். ஆனால் அதற்காய் சண்டை போட்டுக் கொண்டு போகுமளவிற்கு அவளால் முடியவில்லை. அப்பாவை இழந்து எந்த ஆதரவுமின்றி மனது நொறுங்கிப் போய் இருப்பவள்.. அவளுக்கானதை தேடி மனசு அலைபாய்வதை தடுக்க முடியாது. தவிர இந்தக் காதல் படுத்தும் பாடு சரசுவும் அறிந்ததுதானே...இந்த கொஞ்ச நாட்களில் ஜோதி படும் அவஸ்தையை அருகிலேயே அமர்ந்து பார்த்திருந்தவள்.. ஒரு பெருமூச்சுடன் அவளை நெருங்கி அமர்ந்தாள்.

ஒரு குலுக்கலுடன் கார் சரசுவின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. அவள் ஒரு முறை ஜோதியின் கரத்தினை அழுந்தப்பற்றி விட்டு வர்ரேன் சின்னவரே என்றபடி இறங்கிக் கொண்டாள். இப்போது காரிலே ஓர் மயான நிசப்தம் அவள் முன் ஓர் கேள்வி பூதாகரமாய் எழுந்து நின்றது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவள் அந்த வீட்டுக்கு போகப் போகிறாள்.. குணவர்த்தன் இல்லை என்றாலும் முத்து..தாஸ். எல்லோரும் இருப்பார்களே... அங்கே விஷ்ணுவை வேறு சந்திக்க எல்லோருமாய் வருவார்கள்.. வரதராஜன் சார்..வெற்றி.. இவர்களெல்லாம் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள். ஜோ... இறங்கு கண்களை மூடியபடி தனக்குள்ளேயே மூழ்கியிருந்தவள் விஷ்ணுவின் குரலில் கலைந்து இமை பிரித்தாள்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now