55

11.7K 353 179
                                    

காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை...
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள் மட்டும்
கரைக்கே சொந்தமடி....!!!

தயக்கமாய் கேட்டைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே சென்று காலிங்க் பெல்லை அழுத்த கைகளை நீட்டியவள் தயக்கத்துடன் அழுத்தாமலேயே நின்றாள். ஏதோ ஒரு நம்பிக்கையில் பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டாலும் வந்ததென் பின்னால் மனசு முரண்டியது... மீண்டும் கைகளை உயர்த்தி தயக்கமாய் நின்ற போது கதவு படாரெனத் திறந்து கொண்டது.

எங்க வந்தே..
வைஷு...
ஓஹ்... என் பேரு நெனவிருக்கே
வைஷு நான் சொல்றத..
நீ ஒன்னுமே சொல்ல வேணாம் தாயே.. இடத்தை காலி பண்ணு
ஷ்ஷ்... வைஷு அவளை உள்ள கூப்டாம வெளிய நிக்க வெச்சி ஹார்ஷா பேசற.. டோன்ட் யூ ஹாவ் அ மேனர்ஸ்
அப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இப்டி கண்ணீரும் பெட்டியுமா வந்து நிப்பாள்ன்னு தெரிஞ்சுதான் அன்னைக்கே தலப்பாட அடிச்சுக்கிட்டேன்..கேட்டாளா..
வைஷு ப்ளீஸ்.. நான்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு
நான் சொன்னதை நீ கேட்டீயா... எங்க போனார் உன்னோட அருமைக் காதலர் தி க்ரேட் வீ வீ ஆர்...
ஸ்டாப் திஸ் வைஷு நீ உள்ளவாம்மா
இல்லப்பா அவ பேசட்டும் நான் கேட்டுக்கறேன்
அவள் விசும்பினாள்..
என்ன நீ என்னைத் தேடி வந்திருக்க இன்னொருத்தி வரவும் உன்னை தொரத்தி விட்டானா அந்த ராஸ்கல்..
அதே வார்த்தைகள் சற்று வேறு விதமாய்..அவன்தான் நடிகனாச்சே அலுக்கற வரைக்கும் இருந்துப்புட்டு அப்புறமா ஆள் மாத்திக்கிடப் போறான் சரசுவின் உறவினர்களின் குரல் மீண்டும் அவள் காதில் கேட்டது..கூடவே அவனது பிட்ச்...சும் சேர்ந்து ஒலிக்க
சட்டென மடிந்தமர்ந்து சத்தமாய் அவள் அழ ஆரம்பித்தாள். ஹேய் ஜோ அருகே ஓடினாள் வைஷ்ணவி.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now