28

11.6K 311 336
                                    

ஒரு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை
பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ...!!!

விஷ்ணுவின் தொடுகையில் உறைந்து நின்றிருந்த ஜோதியை ஹேய் ஜோ..க்கா என்ன அப்டியே நின்னுட்ட வா..கை பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போனாள் சரசு.

ரோகினி ஏற்கனவே வீட்டிற்கு சென்றிருந்தாள். அறையினுள் நுழைந்த ஜோதி தன்னை இயல்பாக்கிக் கொண்டு முத்தப்பா எங்க..ஆளையே காணோம்..குணாவிடமும் சரசுவிடமும் கேட்க அதுவா...சொல்லிடட்டுமா சரசு..குணவர்த்தன் கண்சிமிட்டினார். வெளியே டாக்டரிடம் போன் பேசிவிட்டு வெற்றியும் அப்போதுதான் உள்ளே வந்தான். ஐயோ தாத்தா அதெல்லாம் ஒண்ணும் கெடையாது...அப்பா ஊட்டுக்கு போயிருக்கு...ஜோதி எதுக்குன்னு கேளு எதுக்குன்னு கேளு..குணா மீண்டும் சீண்டினார். என்ன ஆஹ் எங்கிட்ட எதையோ சொல்லாம ரெண்டு பேரும் என்ன பேசிக்கறீங்க..ஜோ கண்களை உருட்டி மிரட்டினாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜோதிக்கா..ஊட்டுக்கு அத்தான் வந்திருக்காக..அதேன் தாத்தா சும்மா கிண்டல் பண்ணுது...முத்தய்யாவோட தங்கச்சி பையன் வந்திருக்கான் ஜோ..நம்ம சரசுக்கு முறைப்ப்ப்ப்ப்பையன்..மேட்டர் புரிஞ்சுதா...அவர் முறைப் பையனில் ஓர் அழுத்தம் கொடுத்துச் சொல்ல அடடடடடடடே...அப்டியா சேதி...அதான் இவ மூஞ்சி சிவந்திருக்கா...அக்கா நீயும் சேந்துகிட்டு ஊடால பேசி வைக்காத சொல்லிட்டேன்...சரசு விரல் நீட்டி மிரட்டினாள்.

சரசுவின் தோள்களைப்  பற்றி ராகமிழுத்து பாட ஆரம்பித்தாள் ஜோதி.
கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக ஜன்னல சாத்த தான் மனசில்லையே உன்ன காணதான் ரெண்டு கண்கள ப்ரம்மன் செஞ்சது சரியில்லையே
அவக என்ன சொன்னாக
சரசு சொல்ல மாட்டாளே
அவக என்ன தந்தாக
அழகா பொத்தி வெப்பாளே...
பற்றியிருந்த கையில் சரசு முறைத்துக் கொண்டு தட்ட அவளைப் பிடித்து விலக்கி நிறுத்தியவள் பாடலை தொடர்ந்தாள்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now