மூர்த்தி விஷ்ணுவிடம் அக்குன்றைப்பற்றி கூறிமுடித்தவுடன் விஷ்ணுவின் அறையிலிருந்து சென்றார். அவர் சென்றவுடன் “இவர் சொன்னது உண்மைதானா? ஆனால் அது உண்மை இல்லைன்னு என் மனசு சொல்லுதே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் அந்த இடத்தைப்பற்றி தெரிஞ்ச்சிக்கிறதுல.அப்புறம் அந்த பாழாய்ப்போன கனவு வேற” என நினைத்துக்கொண்டிருந்தான்.
“சரி கொஞ்ச நேரம் மொட்டை மாடில உலாத்திட்டு வரலாம் அப்போதான் கொஞ்சமாவது ரிலாக்ஸ்டா இருக்கும் “ என நினைத்தவன் மாடிக்கு சென்றான் .அப்பொழுதுதான் இருட்ட ஆரம்பித்தது என்பதனால் சந்திரனும் நட்சத்திரங்களும் பல்லை இளித்து சிரித்துக்கொண்டிருந்தன. சற்று நேரம் விண்ணைப்பார்த்துக்கொண்டிருந்தவன் எதேச்சையாக தெருவினைக் குனிந்துபார்த்தான் . அங்கே கிழிந்த கந்தலான ஆடையுடன் அதே பைத்தியக்காரன் நின்று இவனையே வெறித்துக்கொண்டிருந்தான். சற்று திடுக்கிட்டுப்போன விஷ்ணு சட்டென திரும்பி நின்றுகொண்டான். மீண்டும் சாலையில் கண்பதித்தவனுக்கு அங்கிருந்த வெற்றுத்தெரு மட்டுமே காட்சியளித்தது … “ அடச்சை…. எல்லாம் என்னோட ஹாலுசினேஷன்” தனக்குள்ளே கூறிக்கொண்டவன் சுற்றுப்புறத்தை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான் .
வாடைக்காற்று அவன் மேனியில் மென்மையாகத்தழுவ அவன் மனம் சிறிது சஞ்சலம் குறைந்து இருந்தது. இந்த ஊருக்கு வந்து முழுசா இரண்டு நாள் கூட முடியல அதுக்குள்ள எவ்வளவு இன்ஸிடென்ட் நடந்துடுச்சி “ என நினைத்துக்கொண்டிருந்தவனின் சிந்தையை அவனின் கைப்பேசி ராஜேஷ் சேர்தலாவின் புல்லாங்குழல் இசையினை மீட்டி அவனுக்கு அழைப்பு வந்திருப்பதை தெரிவித்தது .
திரையில் தெரிந்த தன் அம்மாவின் புகைப்படத்தைப்பார்த்ததும் புன்னைகைப்பூ அதரத்தில் பூக்க அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான் விஷ்ணு . “ அம்மா…. எப்படி இருக்கீங்க … சாப்டீங்களா? "
![](https://img.wattpad.com/cover/119742897-288-k6313.jpg)
YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....