12

1.3K 91 70
                                    

        அனைத்துக்  காட்சிகளும்  மெல்ல  மெல்ல   விஷ்ணுவின்   கண்முன்னே   தெளிவற்ற   காட்சிகளாகி   மறைந்தன .   உடலில்  மின்சாரம்   பாய்ந்தது   போல    உணர்ந்த  விஷ்ணு   சட்டென   தன்  கண்களைத்திறந்தான் .   தன்   உடல்  நடுங்கிக்கொண்டிருப்பதை  உணர்ந்தவன்  தான்   இருக்கும்   இடத்தை   ஒருமுறை   சுற்றும்  முற்றும்   பார்த்தான் .   தான்   இன்னும்  குகைக்குள்தான்  இருக்கிறோம்  என்று   தெளிந்தவன்   தான்  இதுவரைக்  கண்டது  அனைத்தும்   என்னவென்று  ஒரு  கணம்   யோசித்தான் .  ஏனெனில்   அவன்   காட்சிகளாக  கண்ட   அனைத்து   நிகழ்ச்சிகளும்   தனக்கே  தத்ரூபமாக  நிகழ்ந்தது  போல்  இருக்கவே  அவனால்   எளிதாக  சுயநிலைக்கு   வர  இயலவில்லை .  

          தன்னை  சிறிது  நேரம்   ஆசுவாசப்படுத்திக்கொண்டவனுக்கு    அப்போதுதான்  அனைத்தும்   நினைவிற்க்கு   வந்தது .  தான்  குகைக்கு   வந்தது , சந்நியாசியை  சந்தித்தது  என்று   வரிசையாக  நினைவிற்க்கு  வந்தது . அப்போதுதான்     தனக்கு  எதிரே  அமர்ந்திருந்த  சந்நியாசியை காணவில்லை   என  உரைத்தது .  

                அந்த  சந்நியாசி  அமர்ந்நிருந்த   இடத்தின்   அருகில்   ஒரு  வெள்ளைக்காகிதம்   சடசடத்துக்கொண்டிருந்தது .  அதை  எடுத்துப்பிரித்தவன்  அதைப்படிக்கலானான்  . “ என்னுடைய   வேலை  முடிந்துவிட்டது  விஷ்ணுவர்மா  .  நீ   உரைத்த   சத்தியத்தின்படி   இறைவனை   அவனின்   பீடத்தில்   அமரவைக்கும்   பொறுப்பு   இனி  உன்னுடையதாகும் .   இப்பொழுது   குகையின்   வாயிற்கதவு   திறந்திருக்கும் ,   நீ   செல்லலாம் “  என   எழுதியிருந்ததைப்  படித்தவன்  மந்திரத்திற்க்கு   கட்டுண்டது   போல   அப்படியே   செய்தான் .  

                   குகையின்   வாயிலை   அவன்    தாண்டியவுடன்   பழையபடி   குகைக்கதவு    மூடிக்கொண்டு   அங்கு   அப்படி    ஒரு   குகையே   இருந்த  சுவடு   தெரியாத   அளவிற்க்கு   மாற்றியது  . 

                    பல்வேறு   எண்ணங்கள்   மனத்தினிலும்    , உணர்ச்சிகள்   முகத்திலும்   நர்த்தனம்   ஆட   தன்   காரை  நோக்கி    நடந்தான்   விஷ்ணு.     

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now