அஷ்வின் : தெரியுமா..?? பட் கோல் பண்ணி ஒன்ன காணம், நாங்க கோயில் போறோம்டு சொன்னாங்க.. குவாடஸ்க்கு போனேன்.. பட் இருக்கல்லயே..
சுமித்ரா : காணம்னு சொன்னாங்களா..??!!! என்று சுமித்ரா அஷ்வினை பார்த்துக் கேட்டதும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். இது அனைத்தும் அவர்களது நாடகம் என இருவரும் உணர்ந்து கொண்டனர். சுமித்ராவின் கண்ணங்கள் சிவந்தன ; அஷ்வின் கையால் தலைமுடியை கலைத்தபடி மறுபுறம் முகத்தை திருப்பி, வரும் சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான். திடீரென சுமித்ரா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அஷ்வினும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது சிரித்தான். இவர்களது சிரிப்புச் சத்தத்தை கேட்டு பல்கலைக்கழக காவலாளி
காவலாளி : யாரு... யாரிருக்கீங்க..??
சுமித்ரா : ஷ்... அஷ்வின்வந்திடு..
அஷ்வின் : வய்.. இங்க வரமுடியாதா..??
சுமித்ரா : ஈவ்னிங் சிக்ஸ்க்கு மேல இங்க வர முடியாது.. குய்க்கா வா..
اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.
என்று சுமித்ரா அஷ்வினின் கையை இழுத்துக் கொண்டு அவள் வழமையாக உள்ளே வரும் திருட்டு வழியால் வெளியே ஓடினர். விடுதியை நோக்கி ஓடுகையில்..