அத்தியாயம் -33

4.3K 197 35
                                    

ஜெய்கணேஷ் மகன் நல்லதுக்காக என்று நினைத்து செய்தது சின்ன செயல் என்று நினைத்தாலும் அது அப்படியொன்றும் சாதாரண செயல் இல்லை. சதன்யாவின் தேவை ஆடம்பரமான ஒரு வாழ்க்கை.  அதை கொடுத்திருந்தால்  அவள்  விதுலனுடன் சந்தோசமாக இருந்திருக்க போகிறாள்.  ஆனால் அது தவறானது என்ற இவரின் எண்ணத்தால் இடையில் இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிட்டது. அந்த உண்மையை அவர் இனியும் மகனிடம் மறைக்க கூடாது என்று நினைத்து உண்மையை சொல்லிவிட்டு அவனின் தீர்ப்புக்காகவும், முடிவுக்காகவும் காத்திருந்தார் மனதில் கலக்கத்துடன். 

ஆனால் விதுலனை ஏதோ ஒன்று வெகுவாக மாற்றியிருந்தது.  அதனால் தன் தகப்பன் செய்தது இப்போது அவனுக்கு பெரிய குற்றமாக தெரியவில்லை.  அவர் கூறியதை அவன் பெரிதாகவும் எடுக்கவில்லை.  மாறாக இனியாவை பற்றி பேசினான். 

"இந்த நிலா இடையில் வந்து விழுந்திருக்க வேண்டாம். இப்போ என்னை நிம்மதி இல்லாம அலையவிட்டுட்டா." என்றான்.  மகன் கூறியதை கேட்டவுடன் ஜெய்கணேஷ்க்கு ஆச்சரியமாக இருந்தது. 

"ஜெய் என் மேல் உனக்கு கோபம் இல்லையா?" என்று கேட்டார். 

"இல்லப்பா. நீங்க என் நன்மைக்காக செய்திங்க.  நீங்க எதிர்பார்த்தது போலத்தான் சதன்யாவும் நடந்துக்கொண்டாள்.  பணம் பெரிதல்ல என்று என்னோடு அவ கைகோர்த்திருந்தா எல்லாமே சுமுகமாக இருந்திருக்கும்.  ஆனா அவ அப்படி பண்ணல.  அவ மேல இருந்த காதலில் அப்போ அவ செய்ததுதான் சரின்னு நானும் நினைத்தேன்.  ஆனா உங்க இனியா எனக்கு எல்லாவற்றையும் புரியவச்சா. பணம் பெரிசல்ல! சந்தோசமா இருக்கணும் என்ற மனசும், நம்பிக்கையும் இருந்தா போதுன்னு. ஆனா ஒன்னு நான் கண்டிப்பா சாதிப்பேன்னு நம்பிக்கை இருந்த அந்த பிசாசுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போயிட்டு. யப்பா என்னா கோபம்!!! டிவோஸ் கேட்குது அவளுக்கு!" என்றான் கடுப்புடன். 

"அவளுக்கு நம்பிக்கை வரும்படி நீ என்ன செய்திருக்க?" என்று கேட்டார் ஜெய்கணேஷ் சிரித்துக்கொண்டு.  விதுலன் அமைதியா நிற்க 

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now