அத்தியாயம் -22

3K 155 6
                                    

விதுலன் மனதில் ஆயிரம் குழப்பத்துடனும் பயத்துடனும்தான் லோன் போட்டு இந்த தொழிலை தொடங்கினான்.  பத்து லட்சம் என்பது அவனின் தந்தைக்கு ஒரு பணமே இல்லை.  இவன் மீளா கடனில் விழுந்துவிட்டால் இவனை ஒரே ஒரு செக்கில் அவன் அப்பா மீட்டுவிடுவார்.  ஆனால் இவனின் தன்மானம் அங்கே செத்துபோகும்.  அப்படி ஆகிவிடக்கூடாது என்ற வெறிதான் அவனை ஓடவைத்தது. இவன் ஓடுவதற்கு பக்கபலமாக இருந்தவள் அவனின் ஆரூயிர் சனியன்.  

"ஜெய் பணம் தேவைன்னா சொல்ல கூடாதா? நான் பார்த்து பார்த்து தரணுமா? எத்தனை முறை சொல்வது நான் ஒரு அமினிஸியா பிடிச்சவள் என்று. கையில் ஒரு பணம் இல்லாமல் வெளியே போறியே ஆபிஸில் ஏதாவது தேவைப்பட்டா என்ன செய்வ?" என்று  அவனின் பையில் அவள் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து அனுப்புவாள்.  சில நேரம் கூகுல் பே செய்வாள். 

சரியாக சனிகிழமை அவனிடம் இருக்கும் தச்சர், பெயிண்டர், கொத்தனார் என்று எல்லோருக்கும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இடையில் அட்வான்ஸ் கேட்டால் கொடுத்தாக வேண்டும். சில நேரம் பிரச்சனை இருக்காது. சில நேரம் ஒரு ரூபாய் கூட கையில் இல்லாமல் திணறுவான். இருவரும் வேலைக்கு செல்வதால் நகைகளை லாக்கரில் வைத்திருந்தாள்.  அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்து பணத்தை கொடுப்பாள். இப்படியே இவர்கள் சமாளித்துக்கொண்டு வர  வேலை பளுவில் வீட்டில் இருப்பவளுடன் கூட அவன் சரியாக பேசி சில நாட்கள் ஆகிறது.  அங்கோ வெளியே இருக்கும் சதன்யா போனிலே கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டாள்.  

"சது..சது.." என்று இவன் அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி அவளுக்காக சிறிது நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தான். இங்கே வீட்டில் இருப்பவள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து போவது அவன் கண்ணில் படவில்லை.  

இனியாவின் சோர்வை அவள் வெளியே காட்டாமல் இருந்தாலும் ரம்யா கூடவே இருப்பதால் அதை கண்டுக்கொண்டு அவளுக்கு உதவியாக இருந்தாள்.  

"இனியா சும்மா வேலை வேலைன்னு சுத்தாதே. வா புதுசா ஒரு ஹாலிவுட் படம் வந்திருக்கு, பார்த்திட்டு வரலாம்." என்று கட்டாயபடுத்தி இனியாவை அழைத்துசென்றாள் ரம்யா. அவள் என்னத்தை கண்டாள் அங்கே கஷ்டகாலம் இருக்கும் என்று.  பாதி படம் முடிந்து இன்டர்வெல் போடும் மட்டும் எந்த பிரச்சனையும் இல்லை.  அவர்கள் இருவரும் இருந்த ரோக்கு முந்தைய ரோவில் இவர்களுக்கு நேர் கீழே இரண்டு சீட் காலியாக இருந்தது.  யாரோ புக் பண்ணிட்டு வரவில்லை போல என்று நினைத்தார்கள்.  இண்டர்வல் போட்ட பிறகு ஸ்நாக்ஸ்சை வாங்கிக்கொண்டு இவர்கள் வரும் போது அந்த சீட் நிரம்பி இருந்தது.  அதில் இருந்தவர்களை பார்த்த ரம்யா அதிர்ந்து போனாள்.  

விழியோரம் காதல் கசியுதேTempat cerita menjadi hidup. Temukan sekarang