தன் பாட்டியிடம் மறைமுகமாக அவன் பேசவேண்டியதை பேசிவிட்டு நேராக அவன் சென்றது ஜீவன்த்தை பார்க்கத்தான். சாய்வேதனை பார்த்தவுடன் லேசான பதட்டத்துடன் வரவேற்றான் ஜீவன்த்.
"ஏதாச்சும் பிரச்சனையா சார்?" என்றான் நேரடியாக. சாய்வேதனை நம்பி அவளை அவனுடன் அனுப்பிவிட்டாலும் சிறுபிள்ளை போல அவள் எதுவும் செய்துவிடக்கூடாதே என்ற கலக்கம் அவனுக்குள் இருந்துக்கொண்டேதான் இருந்தது. அவன் பயத்திற்கு ஏற்றார் போல திருமணம் முடிந்து மூன்றாம் நாள் சாய்வேதன் அவனை தேடி போகவும் அவன் பயந்துவிட்டான்.
"ப்ளீஸ் முதலில் நீங்க இந்த சாரை விடுங்க. நீங்க என்னை உறவு முறை சொல்லி கூப்பிடாவிட்டாலும் பெயரை சொல்லி கூப்பிடுங்க."என்று கூறிவிட்டு தான் வந்த காரியத்தை பற்றி பேசினான்.
"உண்மையிலேயே உங்க நண்பன் செல்வா இறந்துட்டானா?" என்று கேட்டான். ஜீவன்த்க்கு இப்போதுதான் சற்று நிம்மதி வந்தது. அனுமித்ரா இவனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறாள் என்றால் அங்கே எல்லாம் நலம் என்றுதானே அர்த்தம், அதனால் வந்த நிம்மதிதான்.
"அப்படித்தான் அவனின் நண்பர்களும், உறவினர்களும் சொன்னாங்க. அவன் எனக்கு அவ்வளவு நெருங்கிய நண்பன் கிடையாது. இந்த பெண் அவனை நம்பி போகிற அளவுக்கு அவன் நல்லவனும் கிடையாது. அதனால் நான் அதை மிகவும் தோண்டி துருவவில்லை." என்றான் ஜீவன்த்.
"என்ன சொல்றிங்க? அப்படின்னா அவன் உயிரோட இருக்கவும் வாய்ப்பு இருக்கா?" என்று சற்று அதிர்ச்சியுடன் சாய்வேதன் கேட்க
"வாய்ப்பில்லை. அவனுக்காக எல்லோரும் பொய் சொல்லிருக்க மாட்டாங்க." என்றான் ஜீவன்த்.
"மித்ரா அவனுக்காக ரொம்ப பீல் பண்ணினாளா? ஐ மீன் லவ் இன்னும் இருக்கா?" என்று கேட்டான் சாய்வேதன்.
"இதை நீங்க அவளிடம்தான் கேட்கணும். எனக்கு தெரிந்தமட்டும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவன் மேல் அவளுக்கு தீராத கோபம்தான்." என்றான் ஜீவன்த்.
YOU ARE READING
கடிவாளம் அணியாத மேகம்
Romanceகடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும்...