தன் மனைவி தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து சாய்வேதனுக்கு உள்ளம் குளிர்ந்தது. 'இவனிடம் மட்டுமே நான் பாதுகாப்பாய் இருப்பேன்' என்று சொல்லத்தான் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண்மகனை தேடுகிறாள். ஆனால் எல்லோருக்குமா அப்படி கிடைக்கிறார்கள்! அனுமித்ராவுக்கு கிடைத்திருந்தான் இந்த சாய்வேதன்.
தன்னை இறுக்கமாக தழுவியிருந்த மனைவியின் தலையை அன்புடன் தடவிவிட்டவன் அவளை அங்கே இருந்த இருக்கையில் அமரவைத்துவிட்டு செல்வாவிடம் வந்தான். இருக்கையில் அமர்ந்தவளோ கண்களை மூடிக்கொண்டு தலையை சாய்த்து அங்கே நடக்கும் எதற்கும் அவளுக்கு சம்பந்தம் இல்லாதது போல இருந்தாள். வெளியே அவள் அப்படி தன்னை காட்டிக்கொண்டாலும் அந்த பொல்லாத இரவில் என்ன நடந்தது என்பதை ஒரு லட்ச தடவைக்கு மேலாக நினைவில் கொண்டுவர முயர்ச்சித்ததை இன்றும் நினைவு படுத்த முயன்றாள். ஊகூம்... இன்றும் நினைவு வரவில்லை.
"ஜீவன்த் இவன் மித்ராவுக்கு பயந்து எல்லாம் ஓடிவரவில்லை. நீ கொஞ்சம் நினைவுபடுத்தி பாரு இவன் அங்கே இருந்த நாட்களை. அப்போ அங்கே ஒரு கேஸ் போயிட்டு இருந்திருக்கு. இளம் பெண்கள் தற்கொலை செய்வது, காணாமல் போவது என்று தொடர்ந்து சில கேஸ்கள் பதிவாகியிருக்கு. நியாபகம் இருக்கா?" என்று சாய்வேதன் கேட்க
"இல்ல, எனக்கு அதைப்பற்றி தெரியல. அப்போ நான் குவைத்ல இருந்தேன். நான் வந்த ஒரு வாரத்தில் அனு பிரச்சனை தொடங்கி நான் சென்னை வந்துட்டேன்." என்றான் ஜீவன்த்.
"சார் அந்த கேஸ்ல இன்வால்வ் ஆகியிருக்காரு. இவரு மேல கொஞ்சம் சந்தேகம் இருந்திருக்கு போலீஸுக்கு. அதற்குள் ஆள் எஸ்கேப். அப்புறம் கொஞ்ச நாள்ல செத்து போயிட்டதா எல்லாத்தையும் நம்ப வச்சிருக்காரு ஐயா. ப்ளான் எல்லாம் பக்காவா போட்டவரு இடையில் பார்த்த வேலைதான் இன்னைக்கு இங்கே கொண்டு விட்டிருக்கு. இந்தியாவில் மட்டுமல்ல, இங்கே வந்தும் இவரு இந்த வேலையைத்தான் பார்க்குறாரு. என்ன வேலைன்னா பொண்ணுங்கள ஏமாற்றி அவர்களை வீடியோ எடுத்து விற்பது, அப்புறம் அதை காட்டி பெரிய பெரிய ஆட்களிடம் அந்த பெண்களை அனுப்புவது, அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு ஸ்டெப் மேலே போயி பெண்களை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பது. இதுதான் இவனின் முழுநேர வேலை. பார்ட் டைம் ஜாம் ஒரு கம்பெனியில் ஊரை ஏமாற்ற. ஏமாற்ற நினைச்சவன் வாங்குற சம்பளத்திற்கு தகுந்தார் போல வாழ்ந்திருக்கலாம். இவனுடைய ஆடம்பர வாழ்க்கை ஏற்கனவே இவன் மேல் சந்தேகத்தை போலீஸ்க்கு கிளப்பியிருக்கு. அவங்களுக்கு ஆதாரம் எல்லாம் வேண்டாமாம். ஆப்பு அடிக்கிறதுக்கு ரெடியா இருக்காங்க.
YOU ARE READING
கடிவாளம் அணியாத மேகம்
Romanceகடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும்...