அத்தியாயம் 10

4.3K 208 34
                                    

அனுமித்ரா வரும்வரை சாய்வேதன்  தூங்காமல்தான் இருந்தான்.  குழந்தை இருந்த பக்கத்து அறையில் இருந்து இங்கே வரும் வரை குழந்தையைப்பற்றிய கவலை.  இந்த அறைக்குள் நுழைந்ததும் தன்னை பற்றிய கவலை அவளுக்கு.  முதலிரவு அறை  இவளை மிரட்டியது. அவனிடம் எதுவும் கேட்கவோ, பேசவோ வார்த்தை வரவில்லை அவளுக்கு.  பம்மி  போய் வந்தவள் எங்கே படுப்பது என்று தெரியாமல் நின்றாள்.  அவளை விட்டா அவள் அங்கே இருந்த சோபாவிலோ, தரையிலேயோ படுத்துக்கொள்வாள்.  ஆனால் அங்கே ஒரு புதுமாப்பிள்ளை இருக்கிறானே! அவன் என்ன சொல்வானோ! ஏற்கனவே சொல்வது ஒன்று, செய்வது என்று போய்க்கொண்டிருக்கிறது. 

"நல்லா பார்த்துப்பேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான். இருக்கட்டும் என் மேல் கையை மட்டும் வைத்து பார்க்கட்டும்! அப்புறம் இருக்கு அவனுக்கு.  கொன்னு இதே ரூமில் புதைச்சிடுறேன்." என்று அவளுக்குள் ஆத்திரம் எழ அதை நினைத்து அவளே அதிர்ந்துவிட்டாள். 

"யாரை கொல்லனும் என்று நினைக்கிறேன்.  இருளாகி போன எனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தவன்.  அவனை போய் கொல்லனுமுன்னு இந்த கிறுக்கு மூளை யோசிக்குது பாரு.  மேலே கையை வைச்சா பதமா சொல்லி புரியவைக்கலாம்." என்று தன்னையே திருத்திக்கொண்டவள் படுக்காமல் அப்படியே நின்றிருந்தாள். 

"என்னாச்சு?" என்றான் அவன்.

"வந்து நான் எங்கே படுக்கணும்?" என்று கேட்டாள் அவள். 

"ஏன் உனக்கு தெரியாதா? கல்யாணம் முடிஞ்சா மனைவி எங்கே படுக்கணும்?" என்று கேட்டான் அவன் அவளிடம் கொஞ்சம் விளையாண்டு பார்க்க.  உள்ளே போதை போகாமல் அவனுக்கு தூக்கம் வராது.  இன்று முதல்நாள் என்பதால் அடக்கம் ஒடுக்கமாக இருக்கலாம் என்று பார்த்தால் நாக்கு நாட்டியம் ஆடுது.  இவளை தூங்க வச்சுட்டு போகலாமுன்னு பார்த்தா அவளோ அந்த பெரிய முட்டை கண்ணை விரிச்சு பார்த்துட்டு நிக்குறா.

"அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது.  மனைவியாவது மண்ணாங்கட்டியாவது? கணவனாவது காட்டுமிராண்டியாவது.  இதெல்லாம் பேசாதிங்க.  நீங்க என்ன சொல்லி என்னை கல்யாணம் பண்ணிகிட்டிங்க? சும்மா கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டு இப்போ பட்டுவேஷ்டி சட்டையில் இந்த பூ அலங்காரத்தில் ஒய்யாரமா இருந்து கேள்வி கேட்டுட்டு இருக்கிங்க.  எங்கே தூங்கனுமுன்னு சொன்னா நான் படுத்துப்பேன்.  எனக்கு வேற தூக்கமே வராது இன்னைக்கு  என் பட்டுகுட்டி இல்லாம." என்றாள் அவள்  ரைமிங்கா ஆரம்பித்து சோகமாக முடித்தப்படி.  

கடிவாளம் அணியாத மேகம் حيث تعيش القصص. اكتشف الآن