முழு போதையுடன் வந்த சாய்வேதனுடன் அவன் மனைவி கழிக்கும் முதலும், கடைசியுமான ராத்திரி இன்று. சாய்வேதனின் கைபிடிக்குள் இருந்த அனுமித்ராவுக்கு போதையில் அவன் ஒரு நிலையில் படுக்காமல் உருண்டுக்கொண்டே இருக்க அவளின் தூக்கம் இடை இடையில் கலைந்தது. அதனால் அரைகுறை தூக்கத்தில் கோபத்தில் அவனின் கையை தன் இடையில் இருந்து பிரித்து போட்டுவிட்டு இவள் அவனைவிட்டு தள்ளி படுத்துக்கொண்டாள். குப்புற படுத்து ஒரு காலை நன்றாக நீட்டி மற்றொரு காலை மேலே வைத்து சிசர் கட் மாதிரி அவள் படுத்திருந்தாள். அவளின் ஒரு கை நீண்டு இருந்தது.
இங்கே உருண்டுக்கொண்டே வந்தவன் அவளை காணாமல் போதை பாதி, தூக்கம் மீதி என்று அவளை நெருங்கிவந்து அவளின் பின் கழுத்தில் இவன் முகம் பதிய, பாதி அவள் முதுகில் படந்தவனின் கை நீண்டு, தன் மனைவியின் நீண்டிருந்த கையை போய் கோர்த்தது. இவனின் கை பட்டதும் அவளின் உள்ளங்கை தானாக விரிந்து இவனின் கை விரலுடன் பின்னிக்கொண்டது. பின்னிய கை இருவரின் தூக்கமும் கலையாமலையே கதைபேசியது பின்னி பிணைந்தப்படி. இவனின் விரல்கள் கொடுத்த மென்மையான அழுத்தத்திற்கு அதே மென்மையுடன் அவள் விரல் பதில் கொடுக்க இவனின் இதழ் அவளின் பின் கழுத்தில் கோலம் போட்டது.
அசந்து தூங்கியவளுக்கு அது காற்றில் கேசம் ஆடுகிறது என்ற உணர்வே. அவ்வளவு மென்மையா அவளை முத்தமிட்டவன் அப்படியே அவனின் உதட்டை அவளின் தோள்பட்டைக்கு கொண்டுவந்தான். அங்கே உடை உறுத்த அதை முகத்தாலே விலக்கியவன் அவளின் தோள்வளைவில் முத்தமிட்டான். இவன் இப்படியே செய்துக்கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் அவள் தூக்கம் லேசாக கலைந்தது.
"ம்ம்ம்ம்" என்று அவனிடம் இருந்து தன் கழுத்தை அவள் அகற்ற இவன் காந்தம் போல அதன் பின்னே சென்றான். சென்றவன் அவளின் காது மடல்களை முத்தமிட்டபோது அவள் உடலில் ஓடிய சிலிர்ப்பு அவளை அசைத்தது. அந்த அசைவில் இவன் விலுக்கென்று எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்தாலும் அவனின் கரம் அவள் கரத்துடன்தான் இருந்தது.
YOU ARE READING
கடிவாளம் அணியாத மேகம்
Romanceகடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும்...