அத்தியாயம் 24

3.9K 208 34
                                    

சிட்னி ஏர்போர்ட்

அனுமித்ரா சாய்வேதன் வாழ்க்கையில் வந்து இரண்டு வருடங்கள் ஓடி போய்விட்டது.  மனைவிக்கு கொடுத்த வாக்கின் படி அவன் இன்றுவரை எந்த பெண்ணையும் தேடி சென்றது இல்லை. ஆரம்பத்தில் அது அவனுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. கெட்ட பழக்க வழக்கங்களை கொண்ட அவனது இத்தனை வருட வாழ்க்கையில் அவன் மனதார யாரையும் ஏமாற்றவில்லை, யாருக்கும் நம்பிக்கை துரோகமும் செய்யவில்லை.  ஆனாலும் குடிபோதையில் ஏதோ ஒரு தவறை செய்துவிட்டதாக அவனின் மனதில் ஓரத்தில் ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும். அந்த தவறை சரிசெய்யத்தான் அவன் அந்த பெண்களை தேடி சென்றது.  அந்த கூட்டத்தில்தான் அவன் தவறை செய்தான். முகம் தெரியாத அந்த பெண்ணுக்கு ஏதும் அநியாயம் இழைத்துவிட்டோமோ என்ற எண்ணத்திலே இருந்தவன் நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்ணை தேடுவதை தன் கடமையாகவே நினைத்தான். 

அவனின் இந்த தேடல் பொய்த்துபோக வாய்ப்பு அதிகம்.  காரணம் அவனுக்கு இதெல்லாம் ஒரு அனுமானம்தான். முழு போதையில் அவனுக்கு வந்த கனவாக கூட இருக்கலாம் அந்த பெண்.  அப்படி ஒருத்தி இருக்கிறாளா? இல்லையா என்றே அவனுக்கு நிச்சயம் இல்லை.  ஆனாலும் நிழலோடு நடந்தது அவனது தேடல். 

அது தன் தங்கைக்காக என்று அனுமித்ராவை மணந்து வந்த போதும் தொடர்ந்தது.  மனைவி என்ற ஸ்தானத்தை கொடுத்து ஒருத்தியை இவன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்த பிறகும் அவனின் இந்த நிழல் தேடலை தொடரத்தான் செய்தது. உண்மையா பொய்மையா என்றே தெரியாத ஒருத்திக்காக கண் முன்னே இருந்த ஒருத்தியை மனதார மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான் அவன். ஏனென்றால் அவன் உண்மையிலேயே அநியாயம் செய்தானா இல்லையா என்பது அவனுக்கு நிச்சயம் இல்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால் அதற்கு பரிகாரம் செய்ய நினைத்தான். அந்த பரிகாரத்தை அந்த பெண் நினைக்கும் விதத்தில் நிவர்த்தி செய்ய இவன் தயாராக இருந்தான். அதனால் ஒரு காரணத்திற்காக மணந்த இந்த பெண்ணை மனைவியாக மாற்ற அவன் தயாராக இல்லை. 

கடிவாளம் அணியாத மேகம் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon