25 தீ விபத்து
நந்தினி உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தார். வைஷாலியின் மீது விக்ரம் காட்டிய அபாயகரமான அளவிற்கான அக்கறையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திருமணத்தை நிறுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அவர் அடியோடு இழந்திருந்தார். அவர் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்து தடைகளையும் விக்ரம் உடைத்தெறிந்து விடுவான் என்பது நிச்சயமாய் தெரிந்தது அவருக்கு.
வைஷாலியின் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே வந்தவுடன், அவர்களை நிறுத்தினார் நந்தினி.
"விமலா, நான் கோவிலுக்கு போகணும். எனக்கு ஒரு டாக்ஸியை கூப்பிடு" என்றார்.
தனது புருவங்களை உயர்த்தினான் விக்ரம்.
"டாட், அவங்களை டிரைவர் கூட உங்க கார்ல அனுப்பி வைங்க. நீங்களும் அம்மாவும், என் கூட என் கார்ல வாங்க" என்றான் விக்ரம்.
"ஆமாம்மா. நீங்க என் காரை எடுத்துக்கிட்டு போங்க." என்றார் விமலாதித்தன்.
"நானும் உங்ககூட வரட்டுமா அம்மா?" என்றார் சாவித்திரி.
"இல்ல வேண்டாம் வேண்டாம்... நான் போய்க்கிறேன். நீ கிளம்பு. ராத்திரிக்கு நல்ல சாப்பாடா செய்ய சொல்லி வேலைக்காரங்க கிட்ட சொல்லு"
சரி என்று தலையசைத்துவிட்டு விமலாதித்தனுடன், விக்ரமின் காரில் புறப்பட்டு சென்றார் சாவித்திரி. நந்தினி கோவிலை நோக்கி பயணமானார்.
கோவிலில்...
நந்தினி கோவிலுக்குள் வந்த போது, அவருக்காக அங்கே சுமேஷ் காத்திருந்தான். தான் சாமி கும்பிட்டுவிட்டு வரும் வரை காத்திருக்கும் படி அவனுக்கு சைகை செய்துவிட்டு, சென்றார். அவர் வரும் வரை அவருக்காக காத்திருந்தான் சுமேஷ்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்து ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தார் நந்தினி. அந்த தூணுக்கு மறுபக்கத்தில் ஏற்கனவே சுமேஷ் அமர்ந்திருந்தான். தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
![](https://img.wattpad.com/cover/303029081-288-k552470.jpg)
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...