பதினோரு மணி ஆன பிறகு வீட்டிற்கு வந்த ஜான்வி தனது மெத்தையில் விழுந்தவள் இன்று நிகழ்ந்த நினைவுகள் அனைத்தையும் ஒன்றொன்றாய் புரட்டி பார்த்தாள்.அவனுடன் பேசிய அந்த 5 நிமிட பேச்சு ஏனோ அவளின் முகத்தில் இன்றும் புன்னகையை கொடுக்க அங்கிருந்த நாட்காட்டியை பார்த்தவள் இரண்டு வாரம் விரைவாக செல்ல வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
அடுத்த நாள் வழக்கத்தை விட சற்று வேகமாய் எழுந்தவள் போனினை பார்க்க அதில் குட் மோர்னிங் என்று வந்திருந்தது கௌதமின் எண்ணிலிருந்து.
அதை பார்த்து புன்னகைத்தவள் தானும் குட் மோர்னிங் என்று அனுப்பி வைத்தால் .அதன் பின் தனது அன்றாட வேலைகளை பார்க்க சென்றாள்.
அவனோ உடற்பயிற்சி செய்து வந்தவன் அவளின் குட் மோர்னிங்க்கை பார்த்து புன்னகைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் .காலை ஒன்பது மணி போல் அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வந்தவனிற்கு அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது "என்ன பண்ற சாப்டியா" என்று
அவனிர்கு ஏனோ அந்த சாப்டியா என்ற விசாரிப்பு சற்று இதத்தை தந்தது .அவனிற்கு இதுவரை நண்பர்களும் அவ்வளவாக இல்லாமல் இருக்க தந்தையும் சாப்பிட்டாயா என்றெல்லாம் கேட்க மாட்டார் சாப்பிடுகிறானா என்று பார்ப்பதோடு சரி .
இன்று அவள் கேட்டது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க எனில் நன்றாக தான் இருந்தது "ம்ம் சாப்பிட்டேன் நீ" என்க
அவளோ "இப்போ தான் சாப்ட்டேன். என்ன பண்ற ?"என்க
அவனோ அவனது r 1 5 பைக் அருகில் வந்தவன் "wife கிட்ட நிக்குறேன் "என்று கூறியபடி நேரத்தை பார்க்க அதுவோ இன்னும் அரை மணி நேரத்தில் நீ அலுவலகத்தில் இருக்க வேண்டுமடா மடையா என்று கூறியது .
ஓ ஷிட் இவ கிட்ட பேசுனா நேரத்தையே மறந்துருறேனே என்று நினைத்தவாறு அதை ஸ்டார்ட் செய்து சிட்டாய் பறந்து விட்டான் .இங்கோ அவன் கூறிய wife என்றதில் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தபடி அவனிடம் பேசியவாளிற்கோ புரை ஏறி விட்டது .