கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்டவும் எத்தனை உறவுகள் இருந்தாலும் காதலும், காதலியும் தரும் அன்பு இனிமையானது, ஈடில்லாதது. அந்த காதல் இந்த கடிவாளம் அணியாத மேகத்திற்கு கடிவாளம் இடுமா? குறை இல்லாத மனிதன் இல்லை, அந்த குறையோடு அவனை ஏற்கும் உறவு அவன் வாழ்வில் வருமா?