3

592 39 111
                                    

ஒரு வாரம் கழித்து,

" மச்சான், இந்த வருசம் நடக்க போற இண்டர் காலேஜ் கிரிக்கட் டோர்னமண்டுக்கு நம்ம காலேஜ் சைட்ல ஒரு பவுலர் மிஸ்ஸிங்க்டா" என்று கூறிய தன் நண்பனை கவலையுடன்  பார்த்தான் ஷக்தி. அவனும் அதே யோசனையில்தான் இருந்தான்.

" ஷக்தி, நம்ம க்ரிஷ் சூப்பரா ஸ்பின் பவுலிங்க் போடுவான். ஃபீல்டிங்க் கூட செம்மயா பண்ணுவான். நான் அவனோட ஸ்கூல் மேட்ச் சிலது பார்த்துக்கிறேன். ஆனா ஃபர்ஸ்ட் இயர் பையன நம்ம உடனே டீம்ல சேர்த்துக்கிட்டா இந்த செகண்ட் இயர் பசங்க கேள்வி கேட்பானுங்க. ஏன்னா நம்ம செகண்ட் இயர் சுந்தருக்கு அவன் வந்த உடனே சான்ஸ் கொடுக்கல்ல. நீ இதுல தலையிட்டி சொன்னின்னா செகண்ட் இயர் பசங்க கேட்பாங்கடா" என்று கூற ஷக்தி தன் நண்பன் கூறியதை மனதில் வைத்துக்கொண்டான்.

தனது வகுப்புக்குள் சென்ற க்ரிஷ் மீனாக்‌ஷியை தேடினான்.அவள் இன்னும் காலேஜ் வரவில்லை என்பது தெரிந்தவன் தன் அருகில் இருந்த நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான். முதல் வகுப்பு ஆரம்பமாகும் வேலையில் சரியாக மீனாக்‌ஷி வகுப்பு வர அவளை பார்த்து க்ரிஷ் சினேகமாக புன்னகைத்தான்.

பாடங்கள் முடிந்ததும் மதிய உணவுக்காக ஒரு சிலரை தவிர்த்து மற்ற எல்லோரும் கேன்டீன் செல்ல க்ரிஷ் தனது அக்கா செய்து கொடுத்த உப்புமாவை கையில் வைத்து அதை கவலையாக பார்த்துக்கொண்டிருந்தான். இவன் உப்புமாவை கையில் வைத்துக்கொண்டு ஏதொ யோசிப்பதை உணர்ந்த மீனாக்‌ஷி

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now