40

264 29 39
                                    

காலம், காதல், காமம் இவை ஒரு மனித வாழ்வில் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமெனில் இவை மூன்றும் அவனின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது அவனுக்கு அனுகூலமானதாக அமைய வேண்டும். ஒன்றைவிட்டு ஒன்றை அடைவது அவனது வாழ்வை முழுவைபடுத்தாது.

சுரேஷ், ராதா, ஷக்தி, மீனாக்‌ஷி, க்ரிஷ் என எல்லோரும் அந்த ஷாப்பிங்க் காம்ப்ளக்‌ஷின் ஃபுட் கோட்டில் உட்கார்ந்து காயத்ரியின் வருகைக்காக காத்திருந்தனர். ஆண்களுக்கு காயத்ரியின் வருகை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் அது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. சுரேஷுக்கும் ஷக்திக்கும் க்ரிஷ்ஷின் வாழ்க்கை இனி எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்ற ஆசை. ஆனால் ராதாவுக்கும் மீனாக்‌ஷிக்கும் அவனின் எதிர்காலம் இனி நன்றாக அமைய வேண்டும் என்ற ஆசை.

" ஹாய், முதல்ல சாரி. நான் கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு" என்று அங்கு வந்த காயத்ரி எல்லோரையும் பார்த்து மன்னிப்பு கேட்டாள்.

" ஹேய் பரவாயில்ல காயத்ரி" என்று ராதா கூறி அவளை அமரச்செய்தால்.

அதே இடத்துக்கு பூர்ணியும் ரூபினியும் வர க்ரிஷ் ரூபினியை கண்டு கொண்டான். அவனின் பார்வை எங்கோ செல்வதை கண்ட ராதா யார் என்று பார்க்க அங்கு ரூபினி நின்றுகொண்டிருந்தாள். இன்றே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணிய ராதா ரூபினியை பார்த்து அவர்களை நோக்கி வரும்படி அழைத்தால். ரூபினி எஜமானனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல அவள் கால்கள் தானாகவே அவர்களை நோக்கி நடந்தது. அதற்கு காரணம் கரிஷ் மேல் கொண்ட காதலா இல்லை அவன் குடும்பம் எல்லோரையும் ஒரே நேரத்தில் பார்க்க போகின்றோம் என்ற ஆசையா என்று தெரியவில்லை.

ரூபினியும் அவள் தோழியும் அந்த இடத்துக்கு வந்தது சுரேஷ் மற்றும் ஷக்தி கொஞ்சம் சங்கடமாக இருந்தது. க்ரிஷ்ஷை கூறவே வேண்டாம். எல்லோரையும் பார்த்து ஒரு சினேக பார்வை வீசிய ரூபினி, காயத்ரியை யார் என்பது போல நோக்கினால்.

சிந்தையில் தாவும் பூங்கிளிDonde viven las historias. Descúbrelo ahora