30

367 26 206
                                    

க்ரிஷ்ஷிற்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. மீனாக்‌ஷிதுடன் பேசிய பின் தனது கைபேசி கானாமல் போய் உள்ளது. ஆனால் ரேஷ்மா அவனின் கைபேசியில் இருந்து அவளுக்கு மீனாக்‌ஷியின் ஆபாச படங்கள் வந்ததாக கூறுகின்றால். ரேஷ்மாவிற்கு தன்னை பிடிக்காது என்று தெரியும். ஆனால் என்ன இருந்த போதும் அவள் தன் மீது இப்படி அபாண்டமாக பழி போடுபவள் கிடையாது. அதுவும் பொய்யான பாலியல் புகார் கூறும் அளவுக்கு அவள் ஒன்றும் மோசமானவள் இல்லை. ஆனால் எங்கோயோ தவறு நடந்துள்ளது. எங்கே? என்பதுதான் கேள்வி. அந்த கேள்விக்கு பதிலை கூற தன் தந்தை இடம் அளிப்பாரா என்று அவனுக்கு தெரியவில்லை.

" டேய் உன்னால என் மானம் மரியாதை எல்லாம் போனது பத்தாதாடா. இன்னும் ஏண்டா என் உயிர வாங்குற" என்று சத்தமிட்டவர் சிறிது ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். சிறிது நேரம் என்ன யோசித்தாரோ தெரியவில்லை உடனே தனது அறைக்கு சென்றார். இங்கு இவர்கள் மூவரும் தனித்து விடப்பட்டிருக்க க்ரிஷ்ஷிற்கு இந்த கொஞ்ச நேரத்தில் ரேஷ்மாவிடம் ஏன் தன்மீது அபாண்டமாக பழி போட்டாய் என்பதை கேட்பதை விட ராதா தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நம்பினாலா இல்லையா என்பது தெரியவேண்டும் என்ற ஆசை வந்தது. அது எத்தகைய ஆசை என்றால் தூக்குத் தண்ட்னை கைதியிடம் கேட்கப்படும் கடைசி ஆசை போல.

" அக்கா நான் போட்டோ கேட்டது உண்மைதான். ஆனா அது விளையாட்டுக்கு கேட்டேன்கா. ஆனா சத்தியமா மீனாக்‌ஷி எனக்கு அப்படி ஒரு போட்டோவும் அனுப்பல்லக்கா" என்று கூற ராதா உடைந்து போனால். அவளுக்கு புரிந்தது காதலர்களுக்குள் ஏதோ ஊடல் வந்துதான் தன் உயிரிலும் மேலான தம்பி இப்படி செய்துள்ளான் என்று. ஏன் சுரேஷை காதலிக்கும் அவளுக்கு தெரியாதா. ஆண்கள் ஒரு வீடியோகால் செய்தால் பத்தாவது நிமிடம் என்ன கேட்பார்கள் என்று. ஆரம்பத்தில் ஆசையாக கேட்பது. தன் காதலன் தானே என்று அந்த பெண் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் வந்தவரை லாபம் என்று நினைப்பது. ஆனால் அதுவே எதிர்புறம் இருப்பவர் மறுத்தால் ஆரம்பத்தில் ' என்ன நம்பலையா' என்று எமோசனல் ப்ளாக் மெயில் பண்ணுவது. இல்லை என்றால் 'சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்' என்று கூறுவது.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now