K💞M
OS💞 Part-3
பைக் சீராக ஓடிக்கொண்டிருந்தது...
நீண்ட அமைதியை... லேசாக தொண்டையை கணைத்து கலைத்தான்...
ஹேய்..!!
பின்...னாடி
இருக்கியா...??ஏங்க...!!
இல்...ல..ரொம்ப நேரம் ..
சத்த...மே இல்..லாம...
அமைதியா இருக்கியேனு...அதான்..அதெல்லாம் ஒண்ணும் இல்ல..ங்க
(காதோரம் பறந்த முடியை
சரி செய்த படி..)
என்ன?
பேச..னு
தெரிய..ல...ஹ்ம்ம்....
ச.....ரி
ஏதாவது சாப்டியா..??இல்லேங்க...
சாப்பிடலாமா..???
பசி இல்லை..ங்ளே..!!
அது எப்படி பசிக்காம இருக்கும்...மணி என்ன ஆகுது..
இ..ரு...நல்ல ஹோட்டலா வரட்டும் சாப்டு போலாம்...என்று சாலையை விரட்டினான்..-------------
-------------அந்த பெரிய ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து தனது கைகளை துடைத்து Kerchief -ஐ அவளிடம் நீட்டினான்..
(அவனிடமிருந்து வாங்கிய kerchief -ல் கைகளை துடைத்தபடி....) எங்க போறோம் ங்க...
(பாக்கெட்டில் சாவியை துளாவிய படி) வெளியே போலாம்னு.. கிளம்பிட்டேன்... எங்க போறதுன்னு தெரியல... நீயே சொல்லு.. எங்க போலாம் என்று.... கையில் அகப்பட்ட சாவியை எடுத்தான்...
கடையில வேலை இருக்குனு சொன்னீக...
வேலை இருக்க தான் செய்யிது.... ஆனா போக மனசில்ல...
ஏன்..???
தெரியல...
(இதழ் கடையில் புன்னகைத்தவள் சிறிது யோசித்து....)
கோவிலுக்கு போலா...மா...ங்க...!?