K💞M
OS💞
என்னங்க இங்க வந்து உக்காந்துட்டு இருக்கீங்க....
(விரக்தியில்..)
ஒண்ணும் இல்ல...என்றான்...
ஆ.......மா
நீ இன்னும் தூங்கலையா..!!??தூக்கமே வரலங்க.....
சரி...குடிக்க தண்ணி எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்..Ohhhh...
என்றான். குரலில் சுரத்தை இன்றி...என்னங்க..
ஏன்?? ஒரு மாதிரி இருக்கீங்க...
மணி 12 ஆகுது இன்னும் தூங்காம என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க....உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா..??ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருக்க..
வேற எப்டி பேச சொல்றிங்க..??
எனக்கு வர கடுப்புல..என்றான் கையை முறுக்கி...
"ஆ...... "என்று வந்த கொட்டாவியை கையில் தடுத்து என்ன கடுப்பு...என்றாள்..
"ப்ச்"
ஒண்ணும் இல்ல.. உனக்கு தான் தூக்கம் வந்துருச்சே..நீ போய் தூங்கு...சில நொடி அவனையே பார்த்தவள் புடவையின் தலைப்பை இடுப்பில் சொருகிய படி அவனருகே அமர்ந்தாள்..
இங்க பாருங்க...
என்ன....???என்னாச்சு..??
எதுக்கு இவ்ளோ டென்ஷன்...??பின்ன.. டென்ஷன் ஆகாம...
பாரேன் நமக்குனே எல்லாம் வருது.. எவ்ளோ ஆசையா இருந்தோம்... அண்ணன் இப்டி வெளியே படுக்க சொல்லிட்டு போய்டுச்சு...சரி விடுங்க..
அதையே நினைச்சிட்டு..ஏன் உனக்கு வருத்தமே இல்லையா...???
ஒரு தடவை தடங்கல் வந்தா கஷ்டபடலாம்... இது தான் நமக்கு ஓராயிரம் தடவை வருதே.. அப்புறம் கவலை பட்டு என்ன பண்றது..