வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -30

971 50 13
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முத்தங்கள் நூறு
நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி
போனாளே
என்னிடம் மீண்டும்
தாவென்று கேட்டதும் மௌனம்
ஆனாளே

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்த சூர்யா வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க தேவா அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.சூர்யா அந்த காஃபியை வாங்கியவன் காஃபியை குடிக்க ஆரம்பித்தான். தேவா அவனுக்கு சாப்பாடு தயார் செய்ய போக அவளை செல்ல விடாமல் தடுத்தவன் அவளை பார்த்தான்.

ஹோய் இப்போ எங்க போற என்று கேட்டான் சூர்யா.

தேவா சாப்பாடு செய்ய போவதாக சைகை செய்தாள்.

இவ்ளோ காலையில என்னால சாப்பிட முடியாது நீ போட்டு கொடுத்த காஃபிக்கு ரொம்ப நன்றி இப்போ போய் தூங்கு. இன்னும் விடிய டைம் இருக்கு நான் கிளம்புறேன் என்று சொன்னான் சூர்யா. அவன் ஒரு காபிக்கு கூட நன்றி சொல்லுவதை கேட்ட தேவாக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

அவன் சொன்னதுக்கு சரி என்பது போல தலை அசைத்தாள் தேவா.காஃபியை குடித்த சூர்யா ரூமை விட்டு வெளியே செல்ல அவனை வழி அனுப்ப வேண்டி அவன் பின்னால் நடந்தாள் தேவா. ரூம் கதவுக்கு அருகே வந்ததும் சட்டென்று நின்ற சூர்யா அவள் பக்கம் திரும்பினான். தேவா அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

பாத்தியா என்னதான் நான் ஒரு போலீசா இருந்தாலும் சில விஷயத்தை மறக்குறேன் இப்போ கூட பாத்தியா ரொம்ப முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் என்று சொன்னான் சூர்யா. அவன் சொன்னதை கேட்டு குழம்பினாள் தேவா.

நான் என்ன மறந்தேன்னு உன்கிட்ட சொல்லல இப்போ சொல்றேன் என்று சூர்யா சொல்ல தேவாவும் அவனை மிகவும் சீரியசாக பார்க்க அவள் அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க தேவா கண்ணை மூடி கொண்டாள். முத்தம் கொடுத்தவன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.

இந்த முத்தம்த்ததான் குடுக்க மறந்துட்டேன் எனக்கு ஒரு விஷயம் குடுக்கணும்ன்னா அதை உடனே குடுத்துரணும் இல்லைன்னா அதை பத்தி யோசிச்சிகிட்டே இருப்பேன்.ஸ்டேஷன்ல அக்கியூஸ்ட்க்கு நடுவுல இருக்குறப்போ உனக்கு முத்தம் கொடுக்கலன்னு யோசிச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும் அதான் இப்போவே கொடுத்துட்டேன் நைட் பாக்கலாம். பாக்க மட்டும்தான் முடியுமான்னு நீதான் எனக்கு சொல்லணும் என்று சொன்னவன் நடக்க ஆச்சர்யத்துடன் அவனை பார்த்தவள் அவன் பின்னால் நடக்க ஆரம்பிக்க சூர்யா அவளிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான். தேவா சென்று வெறுமனே படுத்து கொண்டிருந்தாள். அவளுக்கு உறக்கம் கொஞ்சம் கூட வரவில்லை.அவள் மனம் முழுக்க சூர்யா பற்றிய எண்ணம்தான் முதலில் அவனை பார்த்தது அவனை பார்த்து பயந்தது இப்போது அவனை ரசிப்பது என எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவள் முகத்தில் புன்னகை தோன்றியது.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ