வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -21

1.1K 47 4
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤

 தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி

கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே  

தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சூர்யா ரூமில் உட்கார்திருந்தான் அவனுக்குள் தோன்றும் உணர்வுகள் எதையும் அவனால் விளக்கி கொள்ளவே முடியவில்லை.அவன் இதயம் மிகவும் வேகமாக துடித்தது.கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் பிறகு அவள் கொடுத்த டீயை  குடித்துவிட்டு வெளியே வந்தான். தேவா  கிருஷ்ணா உடன் அமர்ந்திருந்தாள்.அவள் அவனை பார்த்து சிரிக்க சூர்யா இப்போது தடுமாறி போனான்.

கிட்சனுக்கு சென்று கிளாசை  கழுவி வைத்தவன் ஹாலுக்கு வந்தான். தேவா கிருஷ்ணா உடன் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

தேவா நேத்து நான் உன்கிட்ட ஒரு முக்கியமான பைல் குடுத்து வைக்க சொன்னேன்ல அது எங்க என்று கேட்டான் சூர்யா தேவாக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. சூர்யா அவளை பார்த்து கண்ணால் சைகை செய்ய தேவா அவன் எதோ சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டு எழுந்து ரூமுக்கு சென்றாள்.

சூர்யா அவள் பின்னே செல்ல போக கிருஷ்ணா பேசினான் .

ஆமா இங்க யாரோ அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணும்னு அடுத்தவங்க செய்ய கூடாது அப்டின்னு    சொல்வாங்க அவங்கள நீங்க பாத்தீங்களா  அண்ணா என்று கேட்டான் கிருஷ்ணா .அவனை பார்த்து முறைத்தான் சூர்யா .

ம்ம்ம் ஆமா அது அடுத்தவங்கதான் செய்ய கூடாதுன்னு சொன்ன தேவா ஒண்ணும் யாரோ இல்லையே என்று சொன்னான் சூர்யா .

ஓ அப்படியா விஷயம் அது சரி என்று இழுத்து சொன்னான் கிருஷ்ணா .

டிவிதான பாக்குற அதை மட்டும் பண்ணு என்று சொன்ன சூர்யா நேராக ரூமுக்குள் சென்றான் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]حيث تعيش القصص. اكتشف الآن