வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -11

1.1K 44 6
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன்
நானே நானே[me; லைன் நல்லா இருக்குல்ல ]
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா வீட்டில்தான் பிரசாத் குடும்பத்தினர் எல்லோரும் இருந்தார்கள் .அமிர்தா குழந்தை வைத்திருக்க கிருஷ்ணா அருகில் சஞ்சனா அமர்ந்திருந்தாள் .குழந்தையாக இருந்ததால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை .ஆனால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது .பிரசாத் அம்மா அப்பா செல்வத்திற்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார்கள் .

அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்ன்னு நம்மளும் எவ்ளோ ஆசை பட்டோம்.புரியுது அவன் பண்ணது தப்புதான் .ஆனா அவன் ஒண்ணும் யோசிக்காம பண்ணுற பையன் இல்லையே .அவன் ரொம்ப பொறுப்பான பையன் அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான் அப்படி இருக்கும்போது அவன் இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்று சொன்னார் பிரசாத் அப்பா சுப்ரமணியம் .

செல்வம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர் மௌனமாக இருந்தார் .

இங்க பாருங்க அண்ணா உங்களுக்கு சூர்யா மேல கோப பட எல்லா உரிமையும் இருக்கு .ஆனா அதை எல்லாம் வீட்டுக்குள்ள வச்சி பேசி முடிங்க .எது எப்படியோ. அவன் வாழ்க்கைல அந்த பொண்ணுதான் மனைவின்னு வரணும்னு இருக்குன்னா யாரால மாத்த முடியும்.அதனால அவன் வந்ததுக்கு அப்புறம் பொறுமையா பேசலாம் என்று பிரசாத் அம்மா கோமதி சொன்னார் .

எனக்கு மட்டும் அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவன் குடும்பம் குழந்தைன்னு வாழணும் ஆசை இல்லையா .அவனுக்கு கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம் ஆனா யாரும் இல்லாத மாதிரி கல்யாணம் பண்ணி இருக்கான் அதான் கஷ்டமா இருக்கு.ஏற்கனவே சொந்தகாரங்க மத்தியில எனக்கு நல்ல பேர் இப்போ ஒரு பொண்ணு பாத்து பையனுக்கு கல்யாணம் கட்டி வைக்க தகப்பனுக்கு முடியல அதான் பையன் இப்படி வாய் பேச முடியாத பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்னு பேசுவாங்க .செய்யாத தப்புக்கு பேச்சு வாங்குறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு அவனுக்கு தோணலையா என்ன .நான் அவனை எதுவும் சொல்ல போறது இல்லை .பசங்க பெத்தவங்ளை பாக்காம இருக்க முடியும் .ஆனா பெத்தவங்க அப்படி இருக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டு பேசி கொண்டு இருந்தார் செல்வம் .அந்த இடத்தில் எல்லோரும் டென்சனாக இருக்க அங்கே சந்தோசமாக இருந்தது கிருஷ்ணா மட்டும்தான் .அதை அமிர்தா கவனிக்கதான் செய்தாள் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Donde viven las historias. Descúbrelo ahora