வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-13

1.1K 51 16
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமல
சில எண்ணங்கள் வலை வீசுதே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா சம்மந்தமே இல்லாமல் வெளியே சென்று கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு வந்தான் . அவன் உள்ளே வரும் போது அமிர்தா தேவாக்கு பூ வைத்து கொண்டிருந்தாள் .

அத்தைதான் பூ குடுத்து விட்டாங்க .உங்களுக்கு பூ ரொம்ப அழகா இருக்கு என்று அமிர்தா சொல்ல தேவா அவளை பார்த்து சிரித்தாள் .

சூர்யா வந்தவன் ஒரு நொடி அவளை பார்த்து அப்படியே நின்று விட்டான் .அவன் தேவாவை பார்த்து கொண்டிருக்க அதை கவனித்த தேவா அவனை பார்த்து கண்ணால் என்ன வேண்டும் என்று கேட்டாள் .ஒன்றுமில்லை என்று தலை அசைத்தான் .

அப்போது செல்வம் மற்றும் கிருஷ்ணா ஸ்கூல் செல்ல தயார் ஆகி வந்தார்கள் .

செல்வம் பிரசாத் மற்றும் அமிர்தாவை பார்த்தார் .

என்னப்பா விஷயம் என்று செல்வம் கேட்க அவருக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் பிரசாத் .

இல்லப்பா நம்ம சூர்யாக்கு கல்யாணம் ஆச்சுல்ல அதான் அவனுக்கு விருந்து குடுக்கலாம்ன்னு நாங்க பேசி இருக்கோம் .அதுக்கு கூப்பிடதான் வந்தோம் என்று சொன்னான் பிரசாத் .

சரிப்பா நல்ல விஷயம் அப்போ நாங்க கிளம்புறோம்.ஸ்கூல்ல நிறைய வேலை இருக்கு .போய்ட்டு வந்துடறோம் .என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு அவர் கிளம்ப கிருஷ்ணாவும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப போக தேவா அவனை நிற்கும்படி சைகை செய்துவிட்டு கிட்சன்க்கு சென்று லன்ச் பாக்ஸ் மற்றும் தண்ணி பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தாள் .

அய்யோ அண்ணி மறந்தே போயிட்டேன் என்று சொன்னவன் அதை வாங்கினான் .

அவனை மறக்காமல் சாப்பிடும்படி சைகை செய்தாள் தேவா .

சரி அண்ணி நான் சாப்பிடறேன் .என்று அவன் சொல்ல கிருஷ்ணாவை பார்த்து புன்னைகை செய்தாள் தேவா .அவர்கள் இருவரையும்தான் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்கள் .இதில் அதிகம் ஆச்சர்யம் அடைந்தது சூர்யாதான் .ஏன் என்றால் இங்கு இருக்கும் எல்லோரையும் விட தேவா உடன் அதிகம் பழகியது என்று பார்த்தால் அது சூர்யாதான் .ஆனால் அவள் சூர்யாவை பார்த்து கூட இப்படி புன்னகை செய்தது இல்லை .என்னதான் சூர்யா அவளை கொடுமை படுத்தவில்லை என்றாலும் தேவா ஒவ்வொருமுறை அவனை பார்க்கும் போதும் அவள் கண்ணில் ஒரு பயம் இருக்கும் .பிரசாத் அமிர்தாவை பார்க்கும்போது கூட அவள் கண்ணில் சின்ன பதட்டம் இருக்கும் ஆனால் கிருஷ்ணாவிடம் பேசும்போது அவள் கண்ணில் பதட்டம் என்பது இல்லை.ஒருவேளை அவன் சிறுவன் என்பதால் கூட இருக்கலாம் .ஆனாலும் சூர்யாக்கு தேவா கிருஷ்ணாவிடம் பேசுவது போல தன்னுடனும் பேச வேண்டும் என்று தோன்றியது .அவன் அவள் உண்மையாக சிரிக்கும் அழகை ரசிக்கவே செய்தான் .அவன் அவள் மீது பார்வையை விலக்கி கொள்ளலாம் என்று நினைத்தாலும் அவன் கண்கள் நகர மறுத்தது .பிரசாத் அவள் தோள் மீது கை வைக்க அவன் பக்கம் திரும்பி என்ன என்று கேட்டான் சூர்யா .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Donde viven las historias. Descúbrelo ahora