இதயமே ஓ
இவளிடம் ஹோ
உருகுதே ஓ ஓ ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதேஅது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓப்[ me ; நானும் நீயா நானா promo பாத்தேன் என்பதால் இந்த பாடல் வரிகள் ]தேவா சூர்யாவின் முடியை மெல்ல கோதி விட்டாள் .சூர்யா கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தவன் பிறகு தேவாவை கட்டிலில் அமர சொன்னான் .தேவா அமர்ந்தாள் .
தேவா நம்ம ரெண்டு பேரும் நிறைய கஷ்டத்தை பார்த்து பார்த்துதான வளந்துருக்கோம் .இந்த கஷ்டத்தை எல்லாம் நாம் அவங்களுக்கு கொடுக்க கூடாது .குழந்தைங்க இந்த உலகத்தை பாக்குறதே அம்மா அப்பா கண்ணுல இருந்துதான் அதனால நம்ம என்ன ஆனாலும் நம்ம குழந்தைக்கு அழகான ஒரு உலகத்தைதான் கொடுக்கணும் என்று சொன்னான் சூர்யா .
தேவா சரி என்று தலை அசைத்தாள் .அவளை பார்த்தவன்
நான் இன்னைக்கு கொஞ்சம் அதிகமா எமோசனல் ஆகிட்டேனோ என்று கேட்டான் சூர்யா .
அவனுடைய முடியை கோதி விட்டவள் அவனை பார்த்து அப்படி எல்லாம் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .
அட்லீஸ்ட் எனக்கு நீ இருக்க தேவா .நீயும் இல்லன்னா நான் என்ன அஆகி இருப்பேன் ,இப்போதான் நாம் குடும்பம் மத்த குடும்பம் மாதிரி ரொம்ப அழகா இருக்கு.நம்ம குடும்பம் பெருசாகனும் .உன்ன மாதிரி ஒரு பையன் என்ன மாதிரி ஒரு பொண்ணு சந்தோசமா அவங்கள் வளக்கணும் .நாம் கிருஷ்ணா அப்போ பெரிய பையன் ஆகிடுவன் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் .அவனுக்கு குழந்தை பிறக்கும் அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொன்னவன் நிறுத்த அவனை பார்த்த தேவா சிரித்தாள்
என்ன ஆச்சு தேவா சிரிக்கிற என்று கேட்டான் சூர்யா ஒன்றும் இல்லை என்பது போல தளை அசைத்தாள் .
ச்சீ நானா வேற ஒருத்தன் குழந்தை அது இதுன்னு சொல்லிடு இருக்கேன் உனக்கு இப்போதைக்கு குழந்தை பெத்துக்க ஒகேவா .இல்ல நாம் அப்புறமா பெத்துக்கலாம் என்று சொன்னன சூர்யா .அவன் அப்படி சொன்னதும் அவனை பார்த்தாள் தேவா .
BẠN ĐANG ĐỌC
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]
Lãng mạnவார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤